Thursday, September 13, 2018

LORD AYYAPPA DEVOTEES PAY HEED *ஐயப்ப பக்தர்களே கொஞ்சம் நில்லுங்கள்!*

*முஸ்லிம் வாவர் பற்றிய பொய் கதை*

*ஐயப்ப பக்தர்களே கொஞ்சம் நில்லுங்கள்!*

 இந்துக்களே !!! ஐயப்பன் வாழ்ந்த காலம் எது, இஸ்லாமியர்கள் இந்தியாவை படையெடுத்த காலம் எது ?. இது கூட தெரியாமல் இந்த கட்டுக்கதையை ஐயப்ப பக்தர்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.

*உண்மை கதை என்ன*

*பேட்டை சாஸ்தா என்பவர் வாபர சுவாமி என்ற பூத கணங்களின் தலைவர் ஆவார்*

சுவாமி ஐயப்பன் ராணியின் சூழ்ச்சியால் புலிப்பால் கொண்டு வருவதற்கு புறப்பட்டார்.

வனத்தின் எல்லையாகிய எருமேலியில் சிவபெருமான் அனுப்பிய பூதகணங்கள் *வாபரன்*என்ற பூதகணத்தலைவனின் தலைமையில் ஸ்ரீ ஐயப்பனை சந்தித்து வணங்கி நின்றனர்.

ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மகிஷி சம்ஹாரம் செய்ய அவை உதவியாக நின்றன.

பின் ஐயப்பன் புலிக்கூட்டங்களுடன் பந்தளம் திரும்பினார். 

பூதகணங்கள் வனத்தின் எல்லைவரை உடன் வந்து வழியனுப்பினர். 

அப்போது *ஸ்ரீ ஐயப்பன் வாபரனை அழைத்து வனத்தின் எல்லையான எருமேலியில் தங்கி இருக்குமாறும் தன்னை தரிசிக்க காடு வழியாக சபரிமலை வரும் பக்தர்களை கொடிய வனவிலங்குகளிலிருந்து காத்து வருமாறு ம் கட்டளையிட்டார்.*

புலிக்கூட்டங்களுடன் பந்தளம் திரும்பிய ஐயப்பன் பந்தளமன்னனுக்கு ஆன்மீக உபதேசம் அருளினார்.

தமக்கும்(தர்மசாஸ்தா)வாபரனுக்கும்(பேட்டை சாஸ்தா)வித்தியாசம் இல்லை என்று கூறினார்.

எருமேலியில் வாபரனுக்கு ஒரு கோயில் அமைக்குமாறும் பணித்தார்.

பின் ஒரு அம்பு எய்தார் அந்த அம்பு விழுந்த இடத்தில் தனக்கு பதினெட்டு தத்துவ படிகளுள்ள ஒருகோவிலும் இடது பக்கம் சற்று தள்ளி மஞ்சள் மாதாவுக்கு ஒருகோவிலும் கட்டுமாறு கட்டளையிட்டுவிட்டு மறைந்தார்.

அதன்படி பந்தள மன்னன் பரிவாரங்களுடன் புறப்பட்டுச்சென்றார். எல்லோரும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் போது வாபரன் மன்னனை சந்தித்து அவரை வேறு யாருமறியாமல் பொன்னம்பல மேட்டிற்கு கூட்டிச்சென்று தர்ம சாஸ்தாவிடம் சேர்த்தார்.

மன்னன் மீண்டும் உபதேசம் பெற்றார்.
எஞ்சியிருந்த சந்தேகங்களும் தீர்ந்து தெளிவுபெற்றார் மன்னன்.

வாபரன் மீண்டும் யாருமறியாமல் மன்னனை பரிவாரங்கள் தூங்குமிடத்தில் கொண்டு சேர்த்தார்.பந்தள மன்னன் ஸ்ரீ ஐயப்பனின் கட்டளையின்படியும் அகத்திய முனிவரின் உபதேசங்களின்படியும் முதலில் எருமேலியில் வாபரனுக்கும் பின் சபரிமலையில் ஸ்ரீ ஐயப்பனுக்கும் மஞ்சள்மாதாவிற்கும் கோயில்கள் அமைத்து பிரதிஷ்டை செய்து உற்சவமும் நடத்தினார்.

எருமேலியில் அமைக்கப்பட்டுள்ள கோயில் பேட்டை சாஸ்தா கோவில் என்றழைக்கப்படுகிறது.

*பேட்டை சாஸ்தா என்பது வாபர ஸ்வாமி என்ற பூதத்தலைவன் ஆவார்*

அன்று முதல் தன்னை வணங்கி பேட்டை துள்ளி காடு வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களை வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்றி கானகம் கடக்க துணை செய்து வருகிறார் வாபரஸ்வாமி.

*வாவர் என்ற பொய்கதை*

நமது பாரதநாடு பல நூற்றாண்டு காலம் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடிமைப்பட்டுக்கிடந்தது

அக்காலத்தில் நம்நாட்டு மன்னர்கள் பல்வேறு நிர்பந்தங்களுக்கு பணிந்து கொடுக்க நேர்ந்தது அவ்விதமான ஏதோ ஒரு நிர்பந்தத்துக்கு ஆளாகிய அக்கால பந்தளமன்னன் ஒருவர்;

*அமீர்காதி செய்னுதீன் பஹதூர் பாவா பா வர் முசலியார் என்ற முஸ்லீம் குடும்பத்திற்கு எருமேலியிலும் பதினெட்டாம்படியிலும் பள்ளிவாசல் அமைத்து ஐயப்ப பக்தர்களிடம் நிதிவசூல்செய்துகொள்ள அனுமதித்து செப்புபட்டயம் வழங்கினார்*

எருமேலி பளளிவாசலில் சமாதி வைக்கப்பட்டுள்ள முஸ்லீமின் பெயர் பாபர் என்றும் பெதருதீன் என்றும் சிக்கந்தர்ஷா என்றும் அலியார்தங்ஙள் என்றும் பலகருத்துக்கள் உள்ளன.

பள்ளிவாசல்களை அமைத்துக்கொண்ட முஸ்லீம்கள் ஐயப்பபக்தர்களிடையே வாவர் என்ற பொய்க்கதையை பரப்பினார்கள் 

*ஸ்ரீ ஐயப்பஸ்வாமி வாவர் என்ற முஸ்லீமை வெல்லமுடியாமல் தோழனாக்கிக் கொண்டதாகவும் வாவர்சமாதியில் வணங்கிவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்றும் கதைகட்டினார்கள்*

நாளடைவில் கள்ளம்கபடமறியாத ஏமாளிகளாகிய ஐயப்பபக்தர்கள் வாபர சுவாமியை மறந்தார்கள். 

*வாபர சுவாமிதான் பேட்டை சாஸ்தா என்பதை மறந்தார்கள்*

வாபர சுவாமிக்கு பதில் வாவர் சமாதியை கும்பிட ஆரம்பித்தார்கள்.
முஸ்லீம்களை திருப்திபடுத்த புனிதபள்ளிக்கெட்டில் ஓம் சின்னத்திற்குப்பதிலாக பிறைச்சின்னம் பொறித்துக் கொண்டார்கள். 
*பக்தர்களின் பணம் பள்ளிவாசலில் கொட்டோ கொட்டென்று கொட்டத்தொடங்கியது.*

*ஆண்டுதோறும் ஐயப்பபக்தர்களின் லட்சக்கணக்கான பணத்தைப்பெற்று அந்த பள்ளி வாசலும் முஸ்லீம் சமுதாயமும் உயர்ந்து கொண்டிருக்கிறது*

இதில் வேடிக்கை என்னவென்றால்
வாவர் சமாதியில் இருப்பவர்கள் உட்பட எந்த முஸ்லீமும் ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியை நம்பவில்லை நாங்கள் அல்லாவைத்தவிர வேறு யாரையும் நம்பமாட்டோம் என்கிறார்கள் 

கேரளத்து தேவஸ்வம் போர்டார் இந்துக்களின் இந்த ஏமாளித்தனத்தை இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று கூறி பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

*ஐயப்பனை நம்பாமல்,விரதமேதும் இல்லாமல், அசைவ உணவு உண்ணும் முஸ்லீம்களிடம் ஐயப்ப பக்தர்கள் திரு நீறு (சாம்பல்) பெற்றுக்கொள்கிறார்கள்*

இந்த பொய்கதைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் ஐயப்பஸ்வாமியின வழிபாட்டு முறைகளை அர்த்தம் புரிந்து கடைபிடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

*ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி பற்றிய மூலநூல் பூதநாதோபாக்யானம் என்ற சமஸ்கிருத நூல் ஆகும்* இது பிரம்மாண்ட புராணத்தில் உட்பட்டது ஆகும்.

மலையாளத்தில் இதன் மொழிபெயர்ப்பு கல்லறயிக்கல் கிருஷ்ணன் கர்த்தா அவர்களால் 1928ல் வெளியானது.

இந்நூலின் பெயர் பூதநாதோபாக்யானம்(கிளிப்பாட்டு)என்பதாகும்.

இதுவே முதல் மலையாளநூல்.

இரண்டாவதாக மூலநூலைத்தழுவி உரைநடையில் மலையாள மொழியில் பி.என்.கிரிஷ்ணுண்ணி என்பவர் 1938ல் ஸ்ரீ பூதநாதன் என்ற நூலை வெளியிட்டார்.

*மேற்கூறிய நூல்களில் வாபர சுவாமியைப்பற்றி கூறப்பட்டுள்ளது. வாவர் என்ற முஸ்லிம் பற்றி எந்தச்செய்தியும் இல்லை*

1946-ல் வித்துவான் குறுமள்ளூர் நாராயண பிள்ளை என்பவர் மலையாள மொழியில் பூதநாத சர்வஸ்வம் என்ற நூலை வெளியிட்டார்.

மேலும்1984-ல் ஆசிரமம் தாமோதரன் என்பவர் வெளியிட்ட ஐயப்ப சர்வஸ்வம் என்ற மலையாள நூல் 1988-ல் ஆஸ்திக மணி A.சுப்பிரமணிய அய்யர் வெளியிட்ட ஐயப்பன் பெருமை என்ற தமிழ் நூல் முதலிய பல நூல்களை பரிசோதித்ததில் *வாவர் பற்றிய கதை ஒரு இடைச்செருகல் என்பது தெளிவாகிறது*

1938-க்கும் 1946-க்கும் இடையில் சூர்ப்பன் கவி, பாண்டிச்சேவம், பந்தளச்சேவம், இளவர்சேவம், பாலாழிமதனம், ஈழச்சேவம்,வாவரங்கம் என்னும் பெயர்களில் மலையாள மொழியில் பல சாஸ்தாப்பாடல்கள் பாடப்பட்டன.

இவற்றில் சில வாவர் என்ற பொய்கதையை பரப்பின.தற்காலத்தில் வியாபார நோக்கத்தில் சினிமாக்களும் சினிமாப்பாடல்களும் பொய்க்கதையை மேலும் பரப்பியிருக்கின்றன.

அன்பான வேண்டுகோள் 

இதைப்படிக்கும் ஐயப்ப பக்தர்கள் பேட்டை சாஸ்தா என்ற வாபர ஸ்வாமியை வழிபட வேண்டுமென்றும் புனித பள்ளிக்கெட்டை பள்ளிவாசலுக்குள் கொண்டு சென்று விரதத்திற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது என்றும் இருமுடிக்கெட்டில் ஓம் சின்னம் பொறிக்கவேண்டும் என்றும் ஸ்வாமி ஐயப்பன் அருளிய பூதநாத கீதையை கற்றுத் தெளிய 
வேண்டுமென்றும் அன்பாய் வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment