Wednesday, March 23, 2016

முருகன் என்றால் அழகு...அழகன் என்றால் முருகன்...இந்த அழகனின் மற்ற பெயர்கள் தெரியுமா?



முருகன் என்றால் அழகு...அழகன் என்றால் முருகன்...இந்த அழகனின் மற்ற பெயர்கள் தெரியுமா?
1. ஆறுமுகம்:
ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்:
குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்:
மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்:
முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் :
கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்:
கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்:
கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் :
கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் :
கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் :
சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி:
ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் :
தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் :
செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் :
செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் :
சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் :
விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் :
வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்:
பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் :
ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் :
சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் :
முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்:
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் :
மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
இத்தனை பெருமைகள் வாய்ந்தவனை பங்குனி உத்திரம் அன்று குடும்பத்துடன் தொழுது எல்லா நன்மைகளையும் பெறுவோம் .
‪#‎பதினெட்டு‬ சித்தர்களை தரிசிக்க குரு ‪#‎அகத்தியபெருமான்‬உரைத்த ‪#‎மூலமந்திரம்‬
‪#‎செய்ததமிழ்‬ தனையரிந்து பதினெண்பேரை
செம்மையுடன் காண்பதற்க்கு மூலங்கேளு
சைதன்னிய மானகுரு தன்னைப் போற்றி
சதாகாலம் ..#ஓம் கிலி ரங் அங் சிங்கென்று
மெய்தவறாப் பூரணமாய் உருவே செய்தால்
வேதாந்த ‪#‎சித்தரைத்தான்‬ வசமாய்க்காண்பாய்
செய்தமுடனவர்களைத்தான் வசமாய்க்கண்டால் உத்தமனே சகலசித்துக் குதவியாமே...

No comments:

Post a Comment