Tuesday, March 22, 2016

PERUMTHUMBAI PLANT

பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றில் பயம் உள்ளவர்கள் - சில மூலிகைகளை உபயோகித்தால் அத்தகைய அமானுஷ்ய துர்சக்திகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட முடியும்.
பேய் விரட்டி ; இது உங்கள் கையிலிருந்தால் உங்களை நெருங்கும் பயங்கர மிருகங்க
ளை கூட இந்த மூலிகை மடக்கி துரத்திவிடும். பேய், பிசாசுகள் உங்களை நெருங்காமல் விலகிச் சென்றுவிடும்.
மான் செவிக்கன்னி ; இது நம்முடைய பகைவர்கள் மறைந்திருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். அதே போல் இது நம்மிடம் இருந்தால், நம்மை ஆவேசமாக நெருங்கும் பகைவர்கள் திரும்பி ஓடிவிடுவார்கள்.
தேள் கொடுக்கி ; இது நம்மிடம் இருந்தால் எந்தவிதமான விஷஜந்துக்கள் கடித்தாலும் விஷம் ஏறாது. மரண பயத்தை நீக்கி உற்சாகமாக்கும் தன்மையுடையது.
மருதோன்றி, புல்லுருவி ;இந்த இரண்டு மூலிகைகளையும் பேய் பிடித்திருப்பதாகச் சொல்லப் படுபவர்கள் கைகளில் கட்டினால் போதும், அடுத்த ஒரு மணி நேரத்தில் பேய், பிசாசு ஓடிவிட தெளிவாகி விடுவார்கள்.
பிரம்மத்தண்டு ; இது தீய சக்திகளால் ஏற்படும் பாதகங்களை போக்கும் தன்மையுடையது.
முசலைச்செடி ; இந்த மூலிகையை தாயத்தாகவோ அல்லது வெறுமனே கட்டியிருந்தால் உங்களை நோக்கி ஏவப்பட்ட பில்லி, சூனியங்கள் உங்களை அனுகாதபடிக்கு தடுக்கும் சக்தியுள்ளது.
நிலம் பிரண்டி ; இது ஒரு மாந்திரீக மூலிகை. ஆற்றின் கரையோரம் படர்ந்திருக்கும் இது மனிதர்கள் வாடை பட்டதும் படக்கென பூமிக்குள் இறங்கி மறைந்துவிடும். தேத்தான் கொட்டையை கையில் எடுத்துச் சென்றால் அந்த மூலிகை பூமிக்குள் மறைந்திருக்கும் இடத்துக்கு நேரே செல்லும் போது வெடித்துவிடும். உடனே அந்த பகுதியை தோண்டிப் பார்த்து நிலம்பிரண்டியை பறித்துவிடலாம். இது கையிலிருந்தால் எந்த தீய சக்திகளும் உங்கை அணுக முடியாது.

No comments:

Post a Comment