Friday, April 1, 2016

பணத்தை கவர வேண்டுமா ? ஆன்மீகத்தில்…….!


செல்வத்தின் மீது கவனத்தை குவியுங்கள். பணத்தின் பற்றாக்குறை மீது நீங்கள் கவனம் செலுத்தினால், அதிக பணத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவது இயலாத காரியமாகிவிடும்.
உங்களுக்கு தேவைப்படும் பணம் உங்களிடம் ஏற்கனவே இருப்பது போன்று பாவனை செய்வதும், கற்பனை செய்து கொள்வதும் அதைப் பெற உதவும். செல்வம் இருப்பது போன்ற விளையாட்டில் ஈடுபடுங்கள். பணம் குறித்த உங்களது மனநிலை மேம்படும். அந்த மனநிலை இன்னும் சிறப்பானவை உங்கள் வாழ்க்கையை நோக்கி பாய வழி வகுக்கும்,
தற்போது மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வு உங்கள் வாழ்வின் இன்னும் அதிகமான பணத்தை விரைவாக கொண்டுவர சிறந்த வழி இதோ……….

உங்கள் மனநிலை எப்போதும் செல்வத்தை குவிப்பதற்க்கு உறுதியாக நிற்கும் ஆன்மீகம். மஹாவிஷ்ணு பூஜை மந்திரம்.

"சங்கு சக்கர கெதாபரனே, துவாரகா நிலை யச்சுதா, கோவிந்தா, புண்டரீகா, க்ஷரக்ஷமாம் சரணா, கதா நமோ பிராமண்ய தோவையா, கோபிகாரமணா, ஹிதாலையா, ஜெகதீதயா, கிருஷ்ணா, கோவிந்தாயா நமோநம"

செய்ய வேண்டிய விதி :
ஒரு கும்பத்தில் தண்ணீர் கொண்டு வந்து, மஞ்சள் நூலினால் கும்பத்தைச் சுற்றி, துளசி, புஷ்பம், சாத்தி, மேற்படி மந்திரத்தை பச்சைக் கம்பளியின்பேரில் உட்கார்ந்து கொண்டு வடக்கு முகமாக இருந்து கொண்டு, துளசி மணியால் ஜெபம் செய்யவும்.

மூலமந்திரம் :
"ஓம் நமோ பாகவதோ, கிருஷ்ணாயா, வாசுதேவாயா, கோபிகலோலா, அம் உம் சௌவும், ஸ்ரீ விஷ்ணு வம்ச திலக ஸ்ரீஹரி, எனக்கு வசமாக சுவாகா"
உரு 1008 ஜெபிக்கவும்.

முதல் நாள் மட்டும் தீட்சை எடுத்து தியானம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் அதன் பிறகு தினந்தோறும் 108 உருவோ, 508 உருவோ, 1008 உரு ஜெபித்து வரவும்.

பலன் :
இந்த மஹாவிஷ்ணுவின் திருமந்திரத்தை எவரும் தினந்தோறும் 1008 உரு ஜெபம் பண்ணுவாராகில் அவருக்குச் சத்துரு கிடையாது. ஜலத்தில் ஜெபம் செய்து ஸ்திரீகளுக்குக் கொடுத்தால், அவர்கள் ஒருக்காலும் தங்கள் புருஷனை விட்டு அன்னியரை விரும்பமாட்டார்கள்.


லட்சுமி தேவி வசிய தீட்சை மந்திரம்
பணத்தை கண்டு அஞ்சும் செல்வந்தர்களே ?
பணம் வேண்டும் என்று நினைக்கும் ஏழைகளே......
நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் காரணம் தெரியாமல் வேதனைகளும் பல துன்பங்களும் நம் வாழ்க்கையில் தினம் நடைபெறுகின்ற ஒரு செயலாகவே இருக்கிறது,
செல்வங்கள் இருந்தும் செல்வம் இல்லாத தோற்றம் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு பரிதாபகரமான ஒரு நிகழ்வு.


எந்த தெய்வத்தையோ அல்லது தேவதைகளையோ வணங்கினாலும் காரணம் புரியாமல் அவதிப்படுகின்றவர்கள், வீட்டை சரியாக அமைத்தும் செல்வம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள், பல தொழில்கள் செய்தும் போதிய வருமானம் கிடைக்கவில்லையே என ஏங்குபவர்கள், பணம் இருந்தும் எந்த தொழில் செய்தால் நஷ்டம் வராமல் பலனை தரும் என்று குழப்பத்தில் இருப்பவர்கள் போன்ற பல சிந்தனைகளில் ஏங்கி தவிக்கும் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு, நமது பாரதத்தில் உள்ள எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் நமது கலாச்சாரம் அழிந்து கொண்டே வருகின்ற இந்த வேளையில் நாம் மட்டும் பயன் பெற்றால் போதாது என்ற எண்ணத்தில் உங்களுக்காகவே.,……….
நமது முன்னோர்கள் எதையும் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது ஏதோ அவர்களுக்கு உயிரை கொடுப்பது போல நம்மை அழித்தது போதும். எல்லா பலன்களும் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு லட்சுமி தேவி வசியம் மூலம் உங்கள் வளர்ச்சியின் முதல் படியாக இருக்கும் இந்த பயிற்சி.
லட்சுமி தேவி வசிய தீட்சை எடுப்பது எப்படி, இதை கற்றுக் கொள்வது எப்படி என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றியதை நாங்கள் அறிகிறோம்.
லட்சுமி தேவி வசிய மந்திரத்தை முறையாக தீட்சை எடுத்து தியானம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
நீங்கள் எதிர் பார்க்கும் லட்சுமி தேவி வசிய மந்திரம் இதோ………….
"ஓம் ஸ்ரீ லக்ஷ்மிதேவி வசி வசி சுவாகா "
எப்படி உச்சரிப்பது எத்தனை நாள் என்பது உங்கள் மன நிலையை பொறுத்து குறைந்தது 48 நாள் முதல் 97 நாட்களுக்குள் உங்களுக்கு லக்ஷ்மிதேவி வசியமாகி விடுவாள்.

No comments:

Post a Comment