Monday, April 4, 2016

மனோவசியம்

மனோவசியம்
மனோவசியம் என்றால் என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருந்தால் இந்தத் தொடர்பு அம்சத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒருவர் மனோ வசியத்திற்கு உள்ளாகி இருந்தால், அவருக்கு, வசியம் செய்தவரின் குரல் மட்டுமே கேட்கும். அவருடைய அடக்கமான ஆணையிடும் குரல் கேட்குமே தவிர, பார்வையாளர்கள் இருந்தால்கூட அவர்களின் உரத்த குரலும் கேட்காது. இந்தியப் பெண் வட்டப்பொட்டு வைத்துக் கொள்வதும் இதேபோலத்தான். அவளுக்கு அது ஆழ்ந்த கருத்தைத் தூண்டி விடும். மனோவசியத்திற்கு உள்ளானவர், வசியம் செய்தவருக்கு மட்டுமே கதவு திறக்கிறார். மற்றவர்களுக்கு அவர் கதவு மூடிக்கொள்கிறது. கிசுகிசுத்தாலும் கூட அவர் செய்துவிடுவார். மற்றவரின் உரத்த குரல்கூட அவர் காதில் விழாது. அந்த மனிதரின் பிரக்ஞைக்கு ஒரே வாசல் மட்டுமே உண்டு. அது வசி யம் செய்தவருக்கு மட்டுமே திறக்கும். அவரது மூன்றாம் விழிச் சக்கரம், வசியம் செய்தவரோடு மட்டும் பந்தப்பட்டு விடுகிறது.
இதேபோலத்தான், பெண்ணின் வட்டப்பொட்டு அவள் கணவனுடன் மட்டும் பந்தப்பட்டு விடுகிறது. அவள் தன் கணவனை மட்டுமே பின்பற்றுவாள். அவனுக்கு மட்டுமே சரணடைவாள். அதுதவிர, உலகின் மற்றவர்களிடையில், அவள் தன் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வாள். அவளது பெண் மை இயல்புக்கு எந்தக் குறையும் நேராது. கணவன் இறந்தவுடன் அவள் தன் திலகத்தை அழித்து விடுகிறாள். காரணம், இனி அவள் யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை! அதன் அறிவியல் அம்சம் என்ன என்பது மக்களுக்குத் தெரியாது. பெண், விதவையாகி விடுவதால் பொட்டு அழிக்கப்படுகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். காரணம் வேறானதாக இருக்கிறது.
அதன்பிறகு அவள், அதிக சுதந்திரத்துடன் ஆண் பிள்ளைபோல வாழ்நாள் முழுதும் வாழலாம். மிகுந்த சுதந்திரம் பெற்றால், அது அவளுக்கு மேலும் நல்லதாகிறது. அற்ப காரியத்திற்கும் கூடப் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை அவளை விட்டு அடியோடு விலகிப்போய் விடுகிறது. பொட்டுப் பரிசோதனை ஆழமானது. சரியான இடத்தில், சரியான பொருள் கொண்டு, சரியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு அர்த்தமே இல்லை. அது வெறும் அழகுக்கு என்றால், அதற்கு எந்தவித மதிப்பும் இல்லை. வெறும் சம்பிரதாயமாக மட்டுமே அமையும். அதனால் தான், பெண்ணுக்கு முதன் முதலாகப் பொட்டு வைப்பதை ஒரு சடங்காகச் செய்கிறார்கள். அது, குரு சீடனுக்குத் திலகம் சூட்டுவது போன் றது. அப்படிச் செய்தால்தான் அது பயனுள்ளதாக அமையும்.
அவையெல்லாம் இப்போது அர்த்தமற்றுப் போய்விட்டன. அவற்றிற்குப் பின்னால் உள்ள அறிவியல் சங்கிலி முழுசாய்த் தொலைந்து விட்டது. எல்லாம் வெறும் சடங்காகி விட்டது. உள்ளீடற்ற வெறும் கூடாகிவிட்டது. சிலர் இன்னும் எந்த நோக்கமும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அதைச் சுமந்து திரி கிறார்கள். பயன்தரும் மூன்றாம் விழிச்சக்கரம் பற்றி, மேலும் சிலவற்றைச் சொல்கிறேன். ஆணைச் சக்கரத்திலிருந்து நேர் மேலே இழுக்கப்படும் கோடு, மூளை யை இரு சம பாகங்களாக பிரிக்கிறது. இடம், வலம் என மூளை, அந்தக் கோட்டில்தான் ஆரம்பமாகிறது. நமது மூளையில் பாதிகூடப் பயன்படுத்தப்படுவதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்! நம்மிடையே அதிபுத்திசாலிகளாக உள்ள அறிஞர்கள்கூட பாதிப் பகுதியை கூட பூரணமாய் பயன்படுத்துவதில்லை! மற்ற பகுதி சும்மா கிடக்கிறது, வளர்ச்சியே இல்லாமல்!
அது ஏன் அப்படியிருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கும் மனோதத்துவ நிபுணர்களுக்கும் இன்னும் புதிராகவே இருக்கிறது. அறுவை செய்து பாதி மூளையை அகற்றி விட்டாலும்கூட, ஒருவர் இயல்பாகவே இயங்க முடியும்! அது அகற்றப்பட்டதுகூட அவருக்குத் தெரியாது! ஆனால், இயற்கை எதையுமே தேவையில்லாமல் படைக்காது என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு தனி மனிதருடைய மூளையில் தவறு ஏற்பட லாமே தவிர, ஒட்டு மொத்தமான சமுதாய மூளைகளில் தவறு நேராது, சமுதாயத்தின் அரைவாசி மூளை பயன்படாமல் செயலற்றுப் போனாலும்கூட. அந்த அரைவாசி மூளை செயல்படுவது, யோகத்தில் மூன்றாம் விழிச்சக்கரம் செயல்பட ஆரம்பித்தால்தான். அரைவாசி மூளை மூன்றாம் விழிச்சக்கரத் திற்குக் கீழே உள்ள மையத்தோடு இணைந்திருக்கிறது. மற்ற அரை மூளை, அந்தச் சக்கரத்திற்கு மேலே உள்ள மையத்தோடு 
இணைந்திருக்கிறது.
மூன்றாம் விழிச்சக்கரத்திற்குக் கீழே உள்ள மையங்கள் செயல்படும்போது மூளையின் இடப்பகுதி வேலை செய்கிறது. மேலே உள்ள மையங்கள் செயல்படும்போது மூளையின் வலப்பாகம் செயல்படுகிறது. மறுபாதி செயல்படாதவரை அது பற்றி எதையும் நாம் தெரிந்துகொள்ள இயலாது.ஸ்வீடனில் ஒருவர் ரயிலிலிருந்து கீழே விழுந்து விட்டார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். அப்போது அவருக்கு, பத்து மைல் சுற் றளவில் ஒலிபரப்பும் வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள் கேட்க ஆரம்பித்தன! மூளையில்தான் ஏதோ பழுது ஏற்பட்டுவிட்டது என்று முதலில் நினைத்தார்கள். காரணம், தன் காதில் ஏதோ ரீங்காரம் எழுவதாகத்தான் அவர் தெரிவித்தார்.
ஆனால், இரண்டு வாரங்களில் அவர், வானொலி நிகழ்ச்சிகளைத் தெளிவாகக் கேட்க ஆரம்பித்து விட்டார். அவர் பயந்துபோய், என்ன கோளாறு எ ன்று மருத்துவரைக் கேட்டார். மருத்துவர், அவர் கேட்டதைச் சொல்லும்படிக் கேட்டார். நோயாளி, கேட்ட பாடலைச் சொன்னார். அதை, மருத்துவர் வீட்டிலிருந்து புறப்படும்போது கேட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறார். அவர் புறப்படும் போது ஒலிபரப்பு முடிந்துவிட்டது. மறு ஒலிபரப்பு ஆரம்பமாகும் நேரத்திற்கு மருத்துவமனைக்கு ஒரு வானொலிப் பெட்டியை கொண்டு வந்தார்கள். சோதனை செய்ததில் அந்த வானொ லியில் ஒலிபரப்பானதே, அவரது காதுகளில் ஒலித்திருக்கிறது. அவரது காதுகள் வானொலி ஏரியல்களாகச் செயல்பட்டிருக்கின்றன என்பது தெரிந்தது! அவருக்கு ஏதாவது அறுவை சிகிச்சை நடத்தியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் அந்த வானொலி ஓசையை நிறுத்த வழியே இல்லை! அவர் விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும், வானொலி அவரது செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது!
இந்த நிகழ்ச்சி நமக்கு ஒன்றைத் தெளிவாக்குகிறது - காதுக்கு மகத்தான சக்தி இருக்கிறது! இந்த நூற்றாண்டின் இறுதியில், வானொலிப் பெட்டி இல் லாமலேயே நம்மால் நிகழ்ச்சிகளைக் கேட்கும் நிலை வரலாம்! காதில், ஆரம்பிக்கவும் நிறுத்தவும் செய்கிற ஒரு கருவியை மாட்டிக் கொண்டால் போதும். ரயில் விபத்தின் காரணமாக அந்த யோசனை வந்தது. பல யோசனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் விபத்துகளாலேயே கண்டுபிடிக்கப்பட்டன. நமது பழைய சிந்தனைகள் காரணமாக, காதுக்கு அப்படியொரு சக்தி இருப்பதாக நம்மால் நினைக்கவே முடியவில்லை. வானொலி பிற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. காதுகள் வந்த பின்னால்! காதுகள் முன் மாதிரி! காது இருப்பதால்தான் வானொலி காதின் மற்ற ஆற்றல்கள் என்ன என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு விபத்தின் மூலமாகக் கண்டுகொண் டால்தான் உண்டு!
இரண்டாம் உலகப் போரின்போது இதேபோன்ற நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது. காயம்பட்ட ஒருவன் மயக்கமடைந்தான். அவனுக்கு நினைவு திரும்பிய போது, அவனால் விண்மீன்களைப் பார்க்க முடிந்தது. பகல் நேரத்திலேயே! விண்மீன்கள் எப்போதும் அங்கேதான் இருக்கின்றன. கதிரொளியின் வீச் சால் பகலில் புலப்படுவதில்லை. வெகு தொலைவில் உள்ள அவற்றைக் கதிரொளி காணவிடாமல் தடுத்து விடுகிறது. கதிரவனைவிடப் பல்லாயிரம் மடங்கும் பல லட்சம் மடங்கும் ஒளியும் பருமனும் மிக்க விண்மீன்கள் இருக்கின்றன. அவை, கதிரவனை விட வெகு தொலைவில் இருக்கின்றன. கதிரொளி நமது பூமியை அடைய சுமார் ஒன்பது நிமிடங்கள் ஆகின்றன. நமக்கு மிக அருகிலுள்ள விண்மீனின் ஒளி பூமியை அடைய நான்கு ஒளியாண்டுகள்ஆகின்றன!
ஒளி வினாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த வேகத்தில் பயணம் செய்தும்கூட கதிரொளி பூமியைச் சேர சுமார் ஒன்பது நிமிடங்கள் ஆகின்றன. அருகிலுள்ள விண்மீன் ஒளியோ நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது! ஒளி பூமியை அடைய, நான்காயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் விண்மீன்களும் நான்கு லட்சம் ஆண்டுகள், நான்கு கோடி ஆண்டுகள், கோடானு கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு, அளவு கடந்த தொலைவில் உள்ள விண்மீன்களும் பிரபஞ்ச வெளியில் இருக்கின்றன! சில விண்மீன் ஒளிகள், புறப்பட்ட காலத்தில் பூமியே உருவாகவில்லை என்றும் அவை வந்து சேரும்போது பூமியே இல்லாமற்போகலாம் என்றும் விஞ் ஞானிகள் கூறுகிறார்கள்! பூமி என்றொரு கிரகம் இருந்ததே அந்த விண்மீன் ஒளிக்குத் தெரியாமல் போய்விடும்! அவை பயணத்தில் இருக்கும்போதே பூமி அழிந்து விடலாம்!
காயம்பட்ட மனிதன் பகலில் விண்மீன்களைப் பார்த்தான். அவன் விழிகளுக்கு என்ன நேர்ந்தது? அவற்றிற்கு அதீத சக்தி கிடைத்தது. இந்த நிகழ்ச்சி கண்ணின் அபூர்வ ஆற்றலை வெளிப்படுத்துகிறது. நமது கண்களில் அழுத்தமான ஆற்றல் உறங்கிக்கொண்டிருக்கிறது அது நமக்குத் தெரியாது.அது நமக்கு ஓர் அற்புதம்போலத் தோன்றுகிறது. ஆனால், அது அற்புதமல்ல. நமக்குள் எத்தனையோ அற்புதங்கள் அடங்கியிருக்கின்றன. ஆனால், அவை வெளிப்படுவதில்லை. பூட்டிய கதவுகளுக்குள் அவை அடைபட்டுக் கிடக்கின்றன. நமது அரைவாசி மூளை பயன்படுத்தப்படாமல் இருப்பது பற்றியும் நெற்றிக்கண் தூண்டுதல் பெற்றால் அது செயல்பட ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட் டேன். அதுதான் யோக தரிசனம்.
அண்மைக்கால நிகழ்ச்சிகளால் அந்த அகப்பார்வை வெளிச்சத்துக்கு வந்துவிடவில்லை. இருபதாயிரம் ஆண்டுகளாக நமக்குத் தெரிந்திருக்கும் உண் மைதான் அது. விஞ்ஞான முடிவுகளை உறுதியாகச் சார்ந்திருக்க வழியில்லை. காரணம், இன்று உண்மையாக இருப்பதை விஞ்ஞானம் ஆறு மாதத்தில் பொய்யாக்கி விடும்! ஆனால், இந்த யோகக் காட்சி, குறைந்தபட்சம் இருபதினாயிரம் ஆண்டு அனுபவப் பழமை கொண்டது. இப்போதுள்ள இந்த மனித நாகரீகம்தான் முதலாவது என்ற மயக்கம் நமக்கு உண்டு. ஆனால், பல மனித சமுதாயங்கள் முன்னே தோன்றி மறைந்துவிட்டன. இதே அறிவியல் சிகரங்களை மனிதன் நமக்கு முன்னே பலமுறை எட்டிப் பார்த்துவிட்டான். அந்தச் சமுதாயங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
1924ல், ஜெர்மனியில் அணுசக்தி ஆய்வு மையம் ஒன்று நிறுவப்பட்டது. ஒருநாள் திடீரென ஒருவர் அந்த மையத்திற்கு வந்தார். தம் பெயர் ஃபால்க நெலி என்று சொல்லிக்கொண்டார். அணு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தார்! நமக்கு முன்னே பல சமுதாயங்கள் அணுசக்தி யால் அழிந்திருக்கின்றன. ஆய்வைத் தொடராமல் நிறுத்தி விடுவது நல்லது என்று எச்சரித்துவிட்டு உடனே வெளியேறி விட்டார்! அப்புறம் அவரைத் தேடினார்கள். அவரைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவே இல்லை!-சுடுகாட்டு சித்தன்-

No comments:

Post a Comment