Monday, April 4, 2016

மனமே புரிந்து கொள் .....!!!

மனமே புரிந்து கொள் .....!!!
எனக்கு ஏற்படும் 
இன்பம் துன்பம் ஆகிய இரண்டு விளைவுகளும் இப்பொமுது செய்கின்ற காரியங்களின் பலன் அல்ல. முந்திய பிறவிகளில் நான் செய்திருக்கும் செயல்களின் பயன்.
உயிரானது
வெளி உலகத்தின் மீது கொண்டுள்ள ஆசைகளை எல்லாம் கடந்து உள்ளத்திற்கு உள்ளே சென்றால் இறைவனின் அருள் கிடைக்கும். எந்த உயிரானது இறைவனைத் தரிசிக்கவில்லையோ அந்த உயிரானது பேரின்பத்தை அடையாது.
மனமே
துன்பத்தை சோதனை என்று ஏற்றுக் கொண்டு விடு உனக்கேன் வேதனை வரப்போகிறது. அந்த சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள். காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.
புரிந்து கொள்
எப்போது நீ போடும் திட்டங்கள் தோல்வி அடைகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள். எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதி அளித்து விட்டான் என்று பொருள்.
வாழ்கையில்
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை. ஏற்றத்தில் மயக்கமும் வீழ்ச்சியில் கலக்கமோ கொள்ளாதே .....
எனக்கு தோல்விகள் குழப்பம்கள் ஏற்படும் பொழுது நான் அடிக்கடி படிக்கும் வசனம்கள் .....
சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவ சிவ சிவ ஓம் ....

No comments:

Post a Comment