Tuesday, July 26, 2016

யார் வந்தேறி ?

யார் வந்தேறி ? ஒண்ட வந்த பிடாரி..ஊர் பிடாரியை வந்தேறி என்கிறதாம்.
=============.
பிராமணனைப் "பார்ப்பான்" என்று சொல்வது அசிங்கப்படுத்தும் வார்த்தை என்று நம்மில் பல பேர் நினைத்துக் கொண்டு "பார்ப்பான்", "பார்ப்பான்" என்கிறோம். திராவிடக் கழகத்தினர் பார்ப்பனர்கள் தமிழர் அல்லர். பார்ப்பனர்கள் "ஆரியர்கள்" என்று பிரசாரம் செய்கின்றனர்.
கீழே பாருங்கள். நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் 'தொல்காப்பியம்'. கிறிஸ்துவுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல். (BCE). அதிலேயே பார்பனர்கள் பற்றி கூரியிருகின்றது.
தொல்காப்பியர்
------------------------
1. பேணுதகு சிறப்பின் பார்ப்பான் (தொல்காப்பியம் செய்யுளியல் 182)
"பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவியன் மரபின், அறு வகையோரும்
களவினில் கிளவிக்கு உரியர் என்ப" (தொல்காப்பியச் சூத்திரம் - பொருள் 181).
3.மதுரை வேளாசான்
---------------------------------
• திணை - வாகை
• துறை - பார்ப்பன வாகை
4. புறநானூறு
-----------------------
ஆவும் ஆன் இயல் பார்ப்பனமாக்களும் ..." (புறம் 9).
"பார்ப்பார்த் தப்பிய கொடுமை ..." (புறம் 34).
"ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து ..." (புறம் 367).
யாகம் என்றால் என்ன என்றே அறியாதயதவரை, "வேளாப்பார்ப்பான்" என்று குறிக்கும் அகம் (24).
5. இளங்கோ
--------------------
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் (சிலப்பதிகாரம் 1:1:49))
6. சீத்தலைச் சாத்தனார்
"பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி" ... (மணிமேகலை 22:41,42)
7.காளமேகம்
----------------------
”மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - …” (பாடல் 6).
பார்ப்பான் மறைஓது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான், கொல்லனே - தேடி
இரும்புஅடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான்
பரும்புடைவை தப்பும்;பறை (பாடல் 90).
8. நெடுங்கண்ணனார்
-------------------------------
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே - (குறுந்தொகை-156)
9. நல்லாதனார்
-----------------------
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசும் ..." (திரிகடுகம் 34)
10.பரஞ்சோதி முனிவர்
------------------------------------
மழவு உருநீத்து அடல் ஏற்றின் வருவார் தம் இடத்து அணங்கின்
மனுவை ஓதிப் பழகிய பார்ப்பன மகளைப் ..." (திருவிளையாடற் புராணம் - விருத்த குமார பாலாரான படலம் 23 பாடல் 1460).
"சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன ... (திருவிளை. மா. பாத. 28).
11.வள்ளுவர்
---------------------
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" (ஒழுக்கமுடமை 134).
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்
நிச்சயம் முயற்சிக்கிறேன்...பொழிப்புரை தேடி அனுப்புகிறேன் புத்தகத்திலிருந்து...
"பேணுதகு சிறப்பின் பார்ப்பான் " என்று தொல்காப்பிய பாடல்படி "பார்பனன் என்பவன் பேணுதற்கு நல்லவன் " என்று புரிகிறது.
"மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் " - மறைவழி நடக்கும் அந்தணர்கள் என்றும் புரிகிறது.
திருவள்ளுவர் , "அறவாழி அந்தணர்" என்றும் "அந்தணன் என்போன் அறவோன்' என்றும் கூறியதிலிருந்து மதிபிற்குரிய சமூகம் என்பது புலனாகிறது.
மதுரை வேளாசன் பாடலால் பார்பனன் சொல் கேட்டு ஒரு போர் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறது.
ஹா ஹா..இது மட்டும் இல்லை...திருக்குறளே போதும் சார்..இதைத் தவிர நிறைய பாடல்கள் இருக்கு...இவர்கள் தமிழையும் படிக்க விடாமல், மற்ற மொழிகளையும் படிக்க விடாமல் இருக்க இது தான் காரணம். குட்டு வெளிப்பட்டு விடும்.. தமிழ் இலக்கிய தொல்காப்பியரே சொல்ல்லியிருக்காரே என்று சொல்லிபாருங்க. 

No comments:

Post a Comment