Monday, July 9, 2018

வாசியாக நின்று சிவனாடும் சண்ட தாண்டவம்

வாசியாக நின்று சிவனாடும் சண்ட தாண்டவம். 

என் மூக்குத் துவாரங்களில் மூச்சு சொரூபமாய் இருந்து நடனம் செய்து வரும் உன்னை அறியாமல் பல பிறவிகளாய் உயிரை இழந்து வருகிறேன் பூரணமே. இடது நாசியும், வலது நாசியும் இரண்டாகப் பிரிந்து மூக்குத் துவாரங்களுக்கு முடிவாகிய புருவ மத்தியில் மறுபடியும் ஒன்றாகச் சேர்ந்து நடத்துகின்ற மூச்சு எனும் நடனத்தை, காலைத் தூக்கி சித்திரப் பதுமை போல நிறுத்த வழியறியேன் பூரணமே. இதிலே கால் என்று குறிப்பிடுவது காற்றை. சித்திரப் பதுமை என்று குறிப்பிடுவது நடராஜரின் உருவத்தை.

என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமல் உயிரிழந்தேன் பூரணமே
சக்திசிவம் இரண்டாகி தான்முடிவி லொன்றாகி
சித்திரமாய் சின்ற திறமறியேன் பூரணமே. 

சங்குரெண்டு தாரையொன்று
ஜன்னல்பின்ன லாகையால்
மங்கி மாறாதே யுலகில்
மானிடர்க ளெத்தனை
சங்கு ரெண்டையும் தவிர்த்து
தாரைபூத வல்லிரேல்
கொங்கைமங்கை பங்கரோடு
கூடிவாழ லாகுமே.
 


வலது, இடது மூக்குத் துவாரங்கள் சேருமிடம் புருவமத்தி. அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் சேருமிடம். இந்த இடத்தையே திரிவேணி சங்கமம் என்பார்கள். நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் பின்னலாய்ப் பின்னி எழுந்து நின்று விளையாடுவது போல இடகலையும், பிங்கலையும் கூடி புருவமத்தியில் சுழுமுனையோடு சேர்ந்து விளையாடும் இரகசியங்களை தெரிந்து கொள்ளாமலேயே மாண்டு போன மானிடர்கள் பல கோடி உண்டு. வலது நாசி, இடது நாசி இரண்டிலும் மூச்சை தனித்தனியாக இழுத்து நடத்தி, நிறுத்தி பிறகு இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து நடத்தி, நிறுத்த சக்தி உடையவர்களானால் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு ஸ்தனங்களை உடைய உமாதேவியரோடு கூடி இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வாழலாம்.

நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு
நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமோடு நீகுளிக்கும்
வேதவாக்யம் கேளுமின்
நெருப்புநீரும் உம்முளே
நினைத்துகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத்
துடர்ந்துகூட லாகுமே.

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி எனும் சக்தியை மூச்சு எனும் மூலக் கனலால் கிளப்பி உச்சி வரை ஏற்றி விடுவீர்களேயானால், அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் ப்ரம்ம கபாலத்தில் இருந்து அமிர்தமானது சுரக்கும். அதை உண்டு சுகித்து, லயித்திருக்கும் போது உடம்பெல்லாம் வியர்த்து குளித்து விட்டு வந்தது போல் இருக்கும். இதுவே இரகஸ்யம். அதாவது மூச்சு எனும் நெருப்பும், நெய் எனும் அமிர்தமும், வியர்வை எனும் நீரும் நம்மிடத்திலே இருப்பதை யோகத்தால் அறிந்து, சொல்ல வல்லமை உடையவர்களானால், எல்லை கடந்த ஜோதியாகிய ப்ரம்மத்தில் கலந்திருக்கலாம்.

இந்த மூச்சு எனும் சூக்கும நிலையை உணர்த்தும் பொருட்டே காலைத்(காற்று) தூக்கி நடனம் ஆடுவது போல நடராஜர் சிலையை வடிவமைத்தனர் முன்னோர்கள். பரம் என்றால் ஆகாயம் அல்லது விண் அல்லது வெட்டவெளி பரமசிவம் என்றால் பரமாத்மா. பரமசிவமான பரமாத்மா நடனம் ஆடுவது போலக் காட்சி தரும் சித் + அம்பரம் சிதம்பரம் ஆகாயத் தத்துவத்தை உணர்த்தும் தலமாகும். அங்கே பக்தர்களுக்குக் காட்டப்படும் சிதம்பர இரகசியமும் வெட்டவெளியாகிய பரத்தைக் குறிப்பதே. அதாவது விண் என்கிற வெட்டவெளி. விண்ணே உயிராக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கியும், பிறகு வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியும் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வலது காலைக் காது வரை நீட்டி இடது கையை மேல் தூக்கி நடனம் ஆடும் போது போட்டியாக உடன் ஆடிய காளியானவள் காலைக் காது வரைத் தூக்க வெட்கம் அடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டதாக புராணக் கதை சொல்வார்கள். அந்தக் கதையின் உள் நோக்கத்தை சொல்வார் யாருமில்லை.

ப்ராணாயாமம் அல்லது சந்தியாவந்தனம் செய்பவர்கள் முதலில் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதற்காகவே நடராஜர் வலது காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டப்பட்டது. பிறகு வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதே நடராஜர் இடது காலைத் தூக்கி நடனம் ஆடுவது. உலைக்களத்தில் இரண்டு தோல் துருத்திகளை வைத்து இரண்டு கைகளால் மாற்றி மாற்றி அமுக்கி ஊதுவது போல வலதுகைப் பெருவிரல் மோதிர விரல்களை வலது இடது நாசிகளில் வைத்து, இரண்டு நாசிகள் வழியாகவும் ஒன்றை அடைத்து ஒன்றன் வழியாக மாற்றி மாற்றி காற்றை உள் இழுத்து நிறுத்த வேண்டும். இரண்டு மூச்சுகளையும் பின்னலாய் பின்னி உள்ளிருத்து நிறுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதே நடராஜர் ஒற்றைக் காலை காது வரை மேலே தூக்கி ஆடுவது போலக் காட்டப்படுவது.

குண்டலினி சக்தியே காளியாகச் சொல்லப்படுவதாகும். முறையாகப் பிராணாயாமம் செய்து வந்தால் அவள் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு உச்சி நோக்கி பயணிப்பாள் என்பதாகும். ஜீவாத்மா பரமாத்மாவை அடையத் தடையாக இருக்கும் மலங்கள் அனைத்துமே அரக்கனாக சித்தரிக்கப் படுகிறது. மூச்சுக் காற்றினால் குண்டலினியை மேலேற்ற முடியுமானால் நம் மேன்மைக்குத் தடையாக இருக்கும் மல மாயங்களாகிய அரக்கனை பரமாத்மாவானது அழித்துவிடும் என்றும் சித்தரிக்கப் பட்டுள்ளது. நாம் விடும் மூச்சுக்கு கால் எனறும் நூல் என்றும் பெயர் உண்டு. நூல் என்றோ ஒரு நாள் அறுபட்டு விடும் எனவே காலாகிய காற்றைப் பிடித்து மேலேறி வரவேண்டும் என்பதை விளக்குவதே நடராஜர் தத்துவம். அவர் காட்டுகிற அனைத்து நடனங்களும் யோகத் தத்துவங்களை உணர்த்துவதேயாகும்.

ஒருபாதந் தன்னைத் தூக்கி யொருபாதந் தன்னை மாற்றி
இருபாத மாடுகின்ற வியல்பைநீ யறிந்தா யானால்
குருபாத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
விருபாத னாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.

இறந்திடு மிருபத் தோரா யிரத் தறுநூறு பேறும்
இறந்திடு மிக்காயம் போனா லீசனைக் காண்ப தென்னாள்
மறந்திடா தறிவான் மூல வாசியை மேலே யேற்றிச்
சிறந்த தற்பரத்து நாகை லிங்கரைத் தரிசி நெஞ்சே.
- நெஞ்சறி விளக்கம்.

இருபத்தோராயிரத்தறநூறு பேரும் என்பது நாம் தினசரி சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். குருபாதம் கூறும் குறிப்பு என்றால் குரு சொல்லிக் கொடுக்கிற படி செய்தால் சூக்குமம் விளங்கும். இருபாத நாகை நாதர் என்றால் இடகலை, பிங்கலை வழியாக நடக்கும் நாகன் எனும் மூச்சைக் காட்ட கால்களைத் தூக்கி நடனஞ் செய்த நடராஜரது மலரடிகளைக் காண்பாய் நெஞ்சே. அதாவது அவர் காட்டும் வழியில் அல்லது அவர் கால்கள்(காற்று)போகும் வழியில் போய் பரத்தைக் காண்பாய் நெஞ்சே. உயர்வாய் இருந்து தான் தானாய் நடந்து கொண்டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அறிவாய் நெஞ்சே.

Saturday, July 7, 2018

Nipah Virus and Pavazha malli

Siddhas advise to take proactive or after Nipah viral fever:-  
1.  Take 5 leaves of Pavazha malli LEAVES (in Tamil), Pavizha malli (in malayalam), Parijatha (in Kannada), har singar (in Hindi), 
2.  tear into small pieces (leaves), 
3.  boil in 200ml water till it reduced to 100ml in slim....
4.  add 3 drops of lemon juice, 2 piece pepper (as powder)..... 
5.  Drink for 3 times every day till fever reduced 

..... This advise seems like Papaya leaf juice for Dengue.... 



Ananthasayanam Vishnu - Ananta Shesha

“A long one but very informative”  - From Udaypai JI 

Deciphering the Ananthasayanam Code
“Udayji, can you explain the significance of Anantha sayanam?" question from a WhatsApp broadcast reader who said he is a Physics professor. (The posture of Lord Vishnu in lying is often called Ananthasayanam.) 

"Do stars die?" I asked.

"What?"

"I am asking because you are a physics teacher. Like human beings, stars will also die, right?"

"Yes, everything in this universe will perish. Most stars take millions of years to die. When a star like the Sun has burned all of its hydrogen fuel, it may become a red giant mass.  When massive stars die, they explode violently as supernovae. They leave either a neutron star or a black hole. Black holes swallow light so they are 'invisible'."

"What happens when all stars die?"

"When all stars die, the universe will die. But what's that to do with Ananthasayanam?" he asked.

I asked again: "Do you know the current composition of the universe?"

"Yes, 5% matter, 27% dark matter and 68% dark energy. It is a vast space..."

"I think universe exists in 'space' (or occupies 'space'), but not only space, time and matter make up the universe."

"You are right. Cosmos is various manifestations of forms of energy. Both energy and matter become one there."

"When the universe dies, will the energy remain? Energy can't be created or destroyed, right?"

"After all stars die, at last this universe will only have lots of photons and dark energy. This is known as the heat death of the universe or the "Big Freeze".

"In layman's terms, it means energy can remain in dormant form, right?" I asked.

"Yes, after the Universe dies there will exist a Unified Field (UF). The UF is a state of maximum entropy consisting of random and chaotic fluctuations without awareness of space or time. In the UF there is the possibility of a spontaneous low-entropy condition at any given scale, then a new Universe will be born and expand in scale."

"So, it is not a permanent death, so it can also be called a cosmic hibernation?"

"Yes"

"After some time, another Big Bang can happen and a new universe can expand from it, right?"

"May be...we do not know about it. It is possible...But how are these things relevant with Ananthasayanam?"

"Oh, you have already explained all about Ananthasayanam. Our ancestors called the process of death of universe as 'Mahapralaya' (Great Dissolution). Vedic scriptures clearly say that when the universes disappear in Mahapralaya, they are no longer in gross form, but they remain within the cosmic consciousness. All beings that inhabit the universes remain within this consciousness."

"Really? Is it the same as we learn in astro-physics?”

"The UF or universal consciousness is narrated in personified form it is called ‘Ananthasayanam’ in Sanskrit.  As you know Anantha=infinity and sayanam = lying down or sleeping. Anantha Sayanam is in a way the 'Cosmic Hibernation'. The silent sleeping nature of the universe. In many articles I have explained how the entire universe and its consciousness (or Brahmam in Sanskrit) is represented by Vishnu."

"Yes I have read your articles on Viswaroopam and Secret of Krishna. But in Anantha Sayanam, the cosmic or Vishnu is sleeping right?"

"It says Vishnu is lying down, but not sleeping. Scriptures clearly say that his sleep is called 'Yoga Nidra', a state of Yoga when one is awake yet asleep. This sleep wakefulness is not bound by either Space or Time. That means the Pure Consciousness cannot be bound by Time or Space for Brahman. Time and space are attributes (or manifestation) of Brahmam..."

"Though Physics says about possibility of cosmic consciousness, it doesn't go to this depth..."

"But Vedic scriptures say that the entire universe is manifestation of Vishnu (Brahmam). It manifests into entire cosmos..."

"But what about the matter? I know the energy and matter are theoretically the same? But how does it get converted to the matter?”

"Yes. Mundak Upanishad provides analogy of a spider. It says as a spider projects forth and draws back (its threads), as plants grow on earth, as hairs grow on the body, so does the universe emerge from the Imperishable Being or Pure Consciousness."

"Interesting. Can you explain bit more about it?"

“The spider designs its web. So it is the intelligent cause of the web. Raw material is also produced by the spider itself (normally any raw material is different from the maker). So here spider is the intelligent as well as the material cause of the web. The energy can manifest as matter."

"Okay, but in Ananthasayanam Vishnu is sleeping on a serpent called Ananta Shesha."

"The word 'Shesha' in Sanskrit texts, especially those relating to mathematical calculation, implies the 'remainder'—that which remains when all else ceases to exist. So the sum total of all the energies this universe is made up of is contained in Sheshanaga."

"It can spring into next universe again..."

"The Vedas say Narayana is the causal principle of Universe. Narayana is the resting form of energy, when he wakes up and becomes active he is called Vishnu.  This is the resting period of Narayana (who holds the sustaining energy of Vishnu) which is said to be between these kalpas."

"Now I understand. After this Kalpa (eon), a Mahapralayam happens and the universe goes to hibernation which is called Ananthasayanam, then again the Big Bang happens. But the Puranas describe Mahapralaya in a different concept. It's about some flood in the earth"

"A flood is the best analogy for ordinary people like us to understand. As per Hindu Scriptures, Mahapralaya takes place when the cosmos goes beyond the redemption due to the destruction of Dharma. Dharma means duty, responsibility, and privilege of an individual as well as universe. If one cell among trillions of cells in the human body manipulates, the entire body will die - as it can cause cancer. Similarly the human greed can kill the earth, which is just a planet in the solar system. But destruction of earth can ultimately lead to the destruction of Universe. In short, it is the adharma that causes destruction. Never it is said that Mahapralaya is the end. It just a transcendental change or death before rebirth & rebuild. This cycle is repeated endless times."

"So, this Mahapralaya or cosmic dissolution is just a temporary stage before next creation"

"Yes, the cosmic dissolution is a period of silence. It may be billions of years in human point of view. Where Lord Vishnu reclines over the deep silenced cosmic ocean (Kshirasagara) in the state of divine sleep (yoga-nidra) on the endless coils of serpent Ananta Sesha. In other words, everything that existed before the cosmic dissolution lays in him the still primeval waters. During the yoga-nidra Vishnu is focused on the infinite reality of his own identity. Both Vishnu and Anantha are depicted in black (or dark bluish black) colour to represent the dark universe!"

"Okay Udayji. It is very simple now. The term consciousness and Brahmam will be bit confusing in modern physics..."

"It is also very simple. The depiction of Vishnu/Narayana in ‘Ananthasayanam’ coveys the absolute reality. After the complete dissolution, that' is in the last state, everything is pure consciousness. It is a state where seeker-seeking-sought are all same - BRAHMAN. The creation and created become one. The experiencer, one who experiences and the experienced are One. Religions misinterpret it as a separate entity and call it God or Creator. There is nothing except Narayana!" (Please check http://www.udaypai.in/ for other articles mentioned above)

இந்துக்களே ஜாக்கிரதை - யோசியுங்கள்

கிறித்துவ மத துவேஷம் இந்துக்களே ஜாக்கிரதை !
உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.
ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு
நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே
அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்
மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம்
நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது
போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும்
ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை
உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்
மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு
ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று
பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி
78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%,
கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்
ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.

இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ
அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க
முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள
மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே
இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.

இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து
வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில்
கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2
லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக
இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது
போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும்
தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட
வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.

இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும்
ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.
யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால்
எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே
மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.
180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்
ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு
விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்
பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை
கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம்
இருக்கும்.

சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்
செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள்
கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக
வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று
65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட
வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே
நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை
போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

*
*==============
மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்
படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு
படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம்
கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே
பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை
யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்
கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.

யோசியுங்கள்...இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி
இஸ்லாத்தில்
தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால
பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை
அவமதித்துப் பேசுகிறார்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து
தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக.
அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க
முற்ப்படுகிறார்கள்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த
சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும்
பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக
தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக்
காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது
செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம்
என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன்
கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும்
வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில்
நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின்
வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே
காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் ,
பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள்
மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்
தொகை பெருகினால் பரவாயில்லையாம்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!

யோசியுங்கள்...

இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.

யோசியுங்கள்...

வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்
ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்
என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்
அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக
நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே
வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்
என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு
ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.

இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?

நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்
அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது
பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.

யோசியுங்கள்...

வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்
ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்
என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்
அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக
நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே
வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்
என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு
ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.

இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?

நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்
அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது
பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.

இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேய
அடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்களை
பாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மை
காப்பாற்றிக்கொள்வோம்

*
ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும்
ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து
சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது
இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.

யோசியுங்கள்..   

அமிர்தக்காற்று - பிராணாயாமம்

கேள்வி - சமீபத்தில் முகநூலில்தான் படித்தேன். பிராணாயாமம் எல்லாம் தேவையற்ற வீண் முயற்சி, மனதைப் பக்குவப்படுத்துவதே ஆன்மீக சாதனை என்றார். அவர் சொல்வது சரியா ?

இராம் மனோகர் - யார் சொன்னார் என்று குறிப்பிட்டால் சௌகர்யமாக இருக்கும். யோக சூத்திரம் வரையறுத்த பதஞ்சலி மகானே தனது அட்டாங்க யோகத்தின் நான்காவது படியாக பிராணாயாமத்தை வடிவமைத்திருக்கிறார். வேதம், ஞானம் என்று முழங்குகிறவர்கள் கூட சந்தியா வந்தனம் செய்கிறார்கள்தானே !? அது என்ன ? அதுவும் பிராணாயாமம்தான். எல்லோரும் இருக்கிறது என்கிற பொழுது ஒருவன் மட்டும் இல்லை என்று சொன்னால் அவன் பிரபலமாகி விடுவான். அது போலத் தங்கள் பெயர் முகநூலில், பத்திரிக்கைகளில், தொலைக் காட்சிப் பெட்டிகளில் வர வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் இப்படி வறட்டு சித்தாந்தம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

''வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
புளிங்கொத்துக் காயும் பழுக்கினும் பிஞ்சாம்.''

இந்த சித்தர் பாடல் பிராணாயாமத்தின் பலனைத் தெளிவாகவும், எளிமையாகவும் சொல்கிறது. சாதாரணமாக நாம் மூச்சை உள்ளே இழுத்து, உடனே வெளியே விட்டு விடுகிறோம். இவ்வாறு மூச்சு விடுவதிலேயே நமக்கு இவ்வளவு சக்தி கிடைக்கிறது என்றால், உள்ளே இன்னும் சிறிது நேரம் வைத்திருந்தால் காற்றிலுள்ள பிராணசக்தி முழுவதும் நுரையீரலில் உள்ள காற்றறைகளால் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குக் கிடைத்தால் எவ்வளவு சக்தி கிடைக்கும் ? சாதாரணமாக நாம் மூச்சுவிடும் போது 79% நைட்ரஜன் வாயு உள்ளே சென்று அப்படியே திரும்பிவிடுகிறது. பிராணவாயுவோ 20% உள்ளே போய் 16% வெளியே வருகிறது. கரிமில வாயு 0.04 உள்ளே போய் 4.04% வெளியே வருகிறது.

இந்தக் கணக்கை உற்று கவனித்தீர்கள் என்றால் ஒரு சூக்கும இரகசியம் விளங்கும். அதாவது சுவாசிக்கும் போது நம் நுரையீரல் ஈர்த்துக் கொண்டது 4% பிராணவாயுவை. எந்த அளவு பிராணவாயுவை ஈர்த்துக் கொண்டதோ அந்த அளவு கரிமிலவாயு வெளியேறுகிறது. அதிக அளவு பிராணவாயுவை நாம் கும்பகம் செய்வதால் ஈர்த்துக் கொள்கிற நுரையீரல், அதே அளவு கரிமிலவாயுவாகிய அபானவாயுவை வெளியேற்றிவிடும். இது நம் ஆரோக்யத்திற்கு மிகவும் பேருதவியாக இருக்கும். ஒரு மனிதன் சுவாசத்தை 4 வினாடி இழுத்து 4 வினாடி இருத்தி 4 வினாடி வெளியிட்டால், அவன் வயது ஐம்பது. 4 வினாடி இழுத்து 8 வினாடி இருத்தி 6 வினாடி வெளியிட்டால் அவன் வயது எழுபத்தைந்து. 4 வினாடி இழுத்து 16 வினாடி இருத்தி 8 வினாடி வெளியே விட்டால் அவன் வயது 100. இப்படியே காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்து கொள்ள வேண்டியது. இது சித்தர்கள் கூற்று.

இனியும் ஒரு கணக்கைத் தருகிறார்கள். அதாவது, பொதுவாக நாம் இடது நாசியில் 16 அங்குலமும், வலது நாசியில் 12 அங்குலம், சுழுமுனையில் 8 அங்குலம் என்று சராசரியாக நிமிடத்திற்கு 15 சுவாசங்கள் வீதம் ஒரு நாள் ஒன்றுக்கு 21600 சுவாசங்களை நடத்துகிறோம்(இது சித்தர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சுவாசக் கணக்கு). சராசரியாக 12 அங்குலம் சுவாசம் வெளியேவிடுவதில் 4 அங்குலம் குறைந்து 7200 சுவாசம் நஷ்டமாகி 14400 சுவாசமே உள்ளடங்குகிறது என்கிறார்கள். இந்த நஷ்டக் கணக்கை சரி செய்யக் கண்டுபிடிக்கப்பட்ட வழியே பிராணாயாமம்.

''ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே !''

96 தத்துவங்களுக்குள் அடங்கிவிடுகிறான் மனிதன். அவை, அறிவு -1, குணம் -3,வினை -2,மண்டலம் -3, மலம் -3, தோஷம் -3, ஏசனை -3, கரணம் -4, பூதங்கள் -5, பொறிகள் -5, தொழில் -5, கோசங்கள் -5, நிலை -5, அவஸ்த்தை -5, புலன்கள் -5, கன்மேந்திரியம் -5, ஆதாரம் -6, தூண்டல் -8, நாடிகள் -10, காற்று -10 என்பனவாம். இதில் 10 காற்றுகளை(வாயு) தசவாயுக்கள் என அழைப்பர். அவை 1 பிராணன், 2 அபானன், 3வியானன், 4 உதானன், 5 சமானன், 6 நாகன், 7 கூர்மன், 8 கிருகரன், 9தேவதத்தன், 10 தனஞ்செயன் என்பனவாகும். மனித உடல்கள எதனால் இயக்கப் படுகின்றன? காற்றால்தான்.

இதையே ஒரு சித்தர் ''காயமே இது பொய்யடா ! வெறும் காற்றடைத்த பையடா !'' என்று உறுதிப் படுத்துகிறார். மனித உடல் முழுவதும் காற்றானது நீக்கமற நிறைந்து இயங்கியும், இயக்கியும் வருகின்றது.மனித இயக்கத்திற்கு ஆதார சக்தி காற்றுதான் என்று அனைத்து சித்தர்களுமே ஒப்புக் கொள்கிறார்கள். மனதை இயக்குவதும் சுவாசிக்கும் காற்றுதான். சித்தத்தின் சலனத்திற்கு காரணம் காற்றுதான். காற்றைக் கவனித்து தியானிப்பதே வாசியோகம் எனப்படும். அதாவது வாசியை கவனித்து அதனோடு ஒன்றுதல். வாசி என்ற சொல்லைத் திருப்பினால் சிவா அல்லவா, எனவே வாசியோகமே சிவயோகமாகும்.

தியானம் செய்ய சுத்தமான காற்றிருந்தாலே போதும் வேறென்ன வேண்டும் என்பார்கள். மூச்சு இல்லையேல் பேச்சு இல்லை. அதிகாலையில் தியானம் செய்வதன் சூட்சுமம் என்னவென்றால், அதற்கும் காற்றுதான் காரணம். அதாகப்பட்டது, சாதாரணமாக காற்றில் ஆக்ஸிஜன் இருக்கிறது. ஆனால் அதிகாலையில் அதோடுகூட ஓசோனும் சேர்ந்து கிடைக்கிறது. அப்போது அது அமிர்தக்காற்று எனப்படுகிறது. அமிர்தம் உண்ட பலன் அதற்கு உண்டு. அதாவது நீடித்த ஆயுள் அல்லது மரணமில்லா பெருவாழ்வு கிடைக்க உதவியாக இருக்கும். இந்த அமிர்தக் காற்றே தேவர்கள் சுவாசிக்கும் காற்று என்று சொல்லப்படுகிறது. அமிர்தக் காற்றில் பஞ்சபூத சக்திகள் நிரம்பித் ததும்பி வழிகின்றன.

சுவாசம்தான் மனிதனின் ஆயுளை நிர்ணயம் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்களே. ஒரு நாயானது ஒருநாளைக்கு 72000 தடவை சவாசித்து 14 வருடங்களில் மரித்துவிடுகிறது. குதிரையானது ஒருநாள் ஒன்றுக்கு 50400 தடவைகள் சுவாசித்து 30 லிருந்து 35 வயதுகாலம் வாழ்ந்து மரிக்கிறது. யானை 28800 தடவைமட்டுமே சுவாசிப்பதால் 100 வருடங்கள் வாழ்ந்து விடுகிறது. ஆமை ஒருநாள் ஒன்றுக்கு 7200 தடவைகள் மட்டுமமே சுவாசிப்பதால் 400 வருடங்கள் உயிர் வாழ்கிறது. பாம்புகள் அதையும் மிஞ்சி 4320 தடவைகள் மட்டுமே சுவாசித்து சுமார் 500 முதல் ஆயிரம் வருடங்கள் கூட உயிர் வாழ்வதாக சொல்லப் படுகிறது.

மனிதனுக்கு விதிக்கப்பட்ட சுவாசமாக சித்தர்கள் குறிப்பிடும் எண்ணிக்கை 21600 ஆகும். அப்படி சுவாசிக்கும் மனிதன் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்கின்றனர். அதே சுவாசத்தை உற்று கவனித்து இழுத்து நிதானமாக மூச்சுவிட பழகிக் கொண்டால் ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர். உதாரணமாக 10800 தடவைகள் நிதானமாக நன்றாக மூச்சுவிட பழகிவிட்டான் என்றால் 240 ஆண்டுகள் உயிர் வாழலாம். 5400 தடவையே நாள் ஒன்றுக்கு சுவாசிப்பவன் 480 ஆண்டுகள் உயிர் வாழலாம் . இதையே திருமூலர் சித்தர்

''காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே!''

என்று குறிப்பிடுகின்றார். நமது சரீரம் அல்லாது மேலும் நான்கு சூக்கும சரீரங்கள் நமக்கு உண்டு என்று சித்தர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தம் ஐந்து. அன்னமய கோஷம் -இது நம் தூல தேகமாகும். பிராணமய கோஷம் - பிராணனும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. மனோமய கோஷம் - மனமும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. விஞ்ஞானமய கோஷம்- புத்தியும், ஞானேந்திரியங்களும் கூடி நிற்பது. ஆனந்த மய கோஷம் - பிராணவாயுவும், சுழுத்தியும் கூடி நிற்பது.

பஞ்சபூத சக்தியாலும், அன்னத்தாலும் நரம்பு, தோல், இரத்தம், மாமிசம், நகம், ரோமம், சுக்கிலம் ஆகிய தாதுக்களால் ஆன தூல தேகமே அன்னமய கோஷம். அந்தக்கரணம், ஞானேந்திரியங்கள், பிராணாதிகள், கர்மேந்திரியங்கள் போன்றவற்றின் சேர்க்கையே சூக்கும சரீரங்களாகிய பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்றும். நம் தூல சரீரத்தின் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற அறிவுக் கருவிகளான ஞானேந்திரியங்களையும், வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபதம் என்கிற கர்மேந்திரியங்களையும் இயக்குவது பிராணனே. நாம் தூங்கினாலும், விழித்திருந்தாலும் நம் இதயத்தை இயங்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தை தடையில்லாமல் நடைபெற வைப்பதும், நுரையீரலை இயக்கி மூச்சை முறைப்படி நடத்துவதும் பிராணனே.

இப்படி உடலின் சகல உள்வெளி இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கும் பிராணனே பிராணமய கோஷம். அன்னமய கோஷத்தைக் கலந்து பரவி தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது பிராணமய கோஷம், அன்னமய கோஷத்தின் ஆத்மா பிராணமய கோஷம். இந்த அன்னமய கோஷத்தை விட்டு உணர்வை உள்நிலைப்படுத்துபவன் பரம்பொருளே. தான் இந்த உடம்பு இல்லை என்கிற மெய்யுணர்வு வளர்ச்சிக்கு நுட்பமாக உடம்பினுள்ளும் வேறாகி நிற்கும் பிராணமய கோஷம் காரணமாகிறது. சித்தர்கள், மகான்கள், யோகிகள் தங்கள் உடலை மாயமாக்கி மறையும் சித்துக்கு அன்னமய கோஷம் பிராணமய கோஷத்தில் அடங்குவதுதான் காரணம்.

சித்துக்களைக் கடந்து, அதற்கு மயங்காதவர்கள் பிராணமய கோஷத்தையும் கடந்து உணர்வை உள்ளே செலுத்த மனோமய கோஷம் ஆட்கொள்கிறது. மனிதனுக்கு எது சரி, எது உணமை என்பதைத் தெளிவுபடுத்துவதே மனோமய கோஷம் தான். மனம் அழிந்து உணர்வு தலைதூக்குமிடம் விஞ்ஞானமய கோஷம். நம் பாதை சரிதானா ? என்ற கேள்வியோடு இலட்சியத்துக்கான முடிவு எடுக்கப்படுவது விஞ்ஞானமய கோஷத்தினால்தான். விஞ்ஞானமய கோஷத்தை எட்டுபவர்களுக்கே உள்ளும் புறமும் ஜோதியைக் காண வாய்ப்பு கிடைக்கும். நாம் எடுக்கும் முயற்சியின் வெற்றியின் மகிழ்ச்சியை உணரும் இடமே ஆனந்தமய கோஷம். யோகத்தின் எட்டு நிலைகளையும் கடந்தவர்களுக்கே ஆனந்தமய கோஷத்தை அனுபவிக்க முடியும்.

இப்படி இந்திரியங்களைக் கட்டி மனத்தை வென்று நம் உடலில் உயிராய் கலந்து நிற்கும் இறைவனை உணர்ந்து, கலந்து, இன்புற்று இருக்கும் நிலையே ஆனந்தமய கோஷத்தில் உணரப்படுகிறது. இந்த கோஷங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது ஆன்மா. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மனம் உள்ளே ஒடுங்க ஒடுங்க உணர்வுகள் ஒடுங்குகின்றன. உணர்வுகளின் ஒடுக்கமே சமாதி நிலை. இவ்வளவும் பிராணனின் கைவல்லியத்தால்தான் விளைகிறது.

ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை

ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை :-

       நாம் நம்மிடம் இருக்கும் அருமையான எளிமையான இயற்கை மருந்து பொருட்களை புறம்தள்ளி விடுகின்றோம்.

       இந்த ஆவாரம் பூ மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து காலம் காலம்மாக நமக்கு பலனளிக்கும் தாவர வகைகளுள் ஒன்று ஆகும். சாதரண உதாரணமாக அணுக்கதிர் தாக்கம் மரபணுக்களை தாக்கி பரம்பரை பரம்பரையாக நோயை உண்டாக்குகிறது, 

          இந்த ஆவரம்பூ மரபணுக்களை தாக்கும் கதிரியக்கத்தை தாக்கும் பொருளாக இருக்கிறது, புற்று நோய் தாக்கும் செல்களை கட்டுப்படுத்தும் திறனும் மற்றும் வெப்பமண்டல பிரதேசத்தில் சூரிய கதிரின் ஊடாக வீட்டில் புகும் ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க சக்திகளை தடுத்து அவற்றை மீண்டும் வெளியே அனுப்பும் ஆற்றலும் கொண்டது, 

        இதன் மெல்லிய இலைகளின் மேல் சிலிக்கா படலமும் இந்த பூக்களின் நிறமியும் இந்த பணியை அற்புதமாக செய்ய இயற்கை நமக்கு தந்துள்ளது.

       இதை பார்த்து விட்டு சொல்பவர் பலர் கூறலாம் இது மிகைப்படுத்தப்பட்ட அல்லது ஓவர் டோஸ் கற்பனை என்று .

         ஆவாரம் பூ கேன்சரை குணப்படுத்துமா அதற்கு என்ன ஆதாரம் என்றால் உலகில் பல நாடுகளில் உள்ள புற்று நோய் கழகத்தின் லோகோவில் உள்ள பூ இந்த கேசியா அரிக்குலடா என்ற ஆவாரம் பூ தான்( Canadian Cancer Society Logo) இந்த நாட்டு புற்று நோய் கழக லோகோவில் ஆவாரம் பூ இதழ் மையத்தில் வெள்ளை நிறம் இப்பூவின் சக்தி ஒருங்கிணைந்த அடையாளம் ஆகும். 

           ஆனால் கனடாவில் காணப்படும் கேசியா அறிக்குலாட்டா வை விட நம்ம ஊர் ஆவாரம்பூ வீரியம் மிக்கது, 

          இனியாவது வாசலின் மேலே பாட்டி சொருகி வைத்த ஆவரம்பூ கொத்தை காய்ந்த சருகு என வீசாதீர்கள்.

        "ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ " என்று முது மொழி உண்டு  ஆவாரை பொதுவாகவே ஒரு காய கற்ப மூலிகை ஆகும். 

          இதன் சிறப்புக்களையும் உபயோகிக்கும் முறைகளையும் காண்போம்.

           ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை நிலங்களிலும்  தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள். 

            பழிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி,மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன் படுகிறது. இது ஒரு வருடப் பயிர் ஆகும். மண்ணில் இதன் வேர் எடுக்கபடாவிட்டால் ஆண்டுக்கணக்கில் உயிருடன் இருக்கும்.

        ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின்  துர் வாடையைப் போக்குவதுடன்  இது முகத்திற்கும்  சருமத்திற்கு நிறமூட்டும்.

இதன் மர பட்டையில் "டானின்கள்" உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. 

       இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன.

       ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.

        இதன்பூச்சூரணத்தையோ,பூவையோ குடிநீராக்கிப் (கஷாயம் செய்தோ)அல்லது பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

      ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி,இவைகளை  நல்லெண்ணையுடன் காய்ச்சி  (ஆவாரைத் தைலம்) தலை முழுகி வர மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

       20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

         ஆவாரம் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து, ஆவாரை பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது.

        சகல நோய் நிவாரணியான ஆவாரை பஞ்சகத்தை  தினம் ஒரு மேஜை கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு, வெந்நீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். நாவறட்சி, உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

      ஆவாரம்பூ என்பது தங்கச்சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது .

        சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின் விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் . 

        ஆனால் ஆவாரம்பூ என்பது  இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் . அதே சமயம்  ஆவாரம்பூ மிக எளிதாக , விலையில்லாமல்  அங்கங்கே பூத்துக் கிடக்கிறது .

         ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள் . அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது . அவரிடம் அந்த மாணவர்கள் கேட்டார்கள் உங்கள்  ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் . அதற்கு அவர் சொன்னார் ” ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது  இந்த  பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம் “என்றார் .

     “ஆவாரம்பூ  காலையில் ஒரு கைப்பிடி , மாலையில்  ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன் ” என்றார் . “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள  தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது ” என்றார் .அவ்வளவு  சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ .

         ஆவாரம் பூவுடன் ஊற வைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால், நமைச்சல், துர்நாற்றம் நீங்கும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள், ஆவாரம் பூ கசாயத்தை தவறாமல் குடித்து வந்தால், உடல் குளுமை அடையும். 

          ஆவாரம் பூவை ஊறவைத்து, குடிநீர்(கஷாயம்) தயாரித்து அருந்தினால் நாவறட்சி நீங்கும். கண் எரிச்சல் நீங்கும். உடல் சூட்டினால் கண் சிவந்து விடும்.இவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து, நீர் விட்டு அரைத்து குழப்பி, படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட்டால் சிவப்பு நிறம் மாறும்.

       ஆவாரம்பூக்களையும்,இதன்  கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். 

      ஆவாரம் பூக்களை சேகரித்து, பாசிப்
பருப்புடன் சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். காலை, மாலை, அரை தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.
         ஆவாரம் பூ மட்டுமே  அல்லாமல்  இந்த செடியின்  இலை,பூ,காய்,வேர்,பட்டை  இவ்வைந்தையும் ஆவரை பஞ்சகம் என்று ஆயுர்வேதத்தில்  சொல்லப்படும் படும் எனறு முன்னரே குறிப்பிட்டிருந்தேன். 
           இந்த " ஆவாரை பஞ்சகத்தை"காபி போல் வைத்து பருகி வர பற்பல நோய்களை
போக்கும் அற்புத ஆரோக்கிய பாணமாகும்.
                  
                                  Dr M C Ramamurthy 
                                        9150001551

தெய்வீக ரகசியங்கள்

தெய்வீக ரகசியங்கள்

1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் . குறிப்பாக துளசி அல்லது தொட்டா சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்

2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .

3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .

4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .

5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரிசெய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .

6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் , மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .

8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை , பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .

9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது , இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து காக்கும்.
அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )

10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும்.

Ants Rules of Life

நான் என்பது எது? Who am I ?

எல்லாம் அவன் செயல். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி  செய்தேன்,

*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!

*நான்* பெரியவன்,

*நான்* தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

*நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

*நான்* தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு நாம் என்ற எண்ணம் கொண்டு, அனைவரிடமும் *அன்பாக* இருங்கள். 

*உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*

*உணவைப்பற்றி கவலைப்படாதே! அது இயற்கையாக பரிணமித்து இருக்கும் இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*

அதர்மம் புரியதே இயற்கை பொய்த்துவிடும். கடமையை செய் பலன் தருவது இறைவன் கையில் உள்ளது. 

*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! வாழவும் சாவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*

உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்

உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.....

உனக்கும் கீழே இருப்பவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி தேடு. (கவி கண்ணதாசன்) 

(inputs From Indira Haridoss) 

நான் என்பது எது? 

மனித உடலை மூன்று  கூறுகளாக பிரிக்கலாம். ஒன்று சூல உடல். அது கண்ணுக்கு தெரியும் உடல். அடுத்த உடல் சூக்கும உடல். அது கண்ணுக்கு தெரியாத நிழல் உடம்பு அல்லது பேய் உடம்பு. மூன்றாவது உடம்பு கரண உடல். அதுவே உயிர் என்பது. இவற்றில் எது நான் என்பது? முதல் உடம்பு நிலை அற்றது. மனம் எடுக்கும் முடிவுக்கு செயல் வடிவம் தரும் ஒரு கருவி ம‌ட்டுமே அது. எனவே அது நான் ஆகாது. மூன்றாவது உடல் எனும் உயிர் நிலையானது. அது கடவுளின் உடமை என்பதால் அதுவும் நான் ஆகாது. அப்படியானால் நான் என்பது இரண்டாவது உடலான சூக்கும உடல் அல்லது பேய்  உடம்பு ஆகும். மனம் அதன் அங்கம். 

நான் எனும் இந்த பேய் உடம்பின் அங்கமான மனமே மனிதன் உயிர் பெற்று இருக்கும்போது போடும் ஆட்டங்களுக்கு எல்லாம் மூல காரணம். மனம் நினைக்காத வரை அதர்மம் குறித்த எண்ணம் ஒருவனுக்கு வருவதில்லை.

அமெரிக்காவில் இந்து மத வளர்ச்சி

I அமெரிக்காவில் இந்து மத வளர்ச்சி. 

சுவிசேஷக் கூட்டம் நடத்தி, முடவர் கால் பெற்றதாகவும், குருடர்கள் கண் பார்வை பெற்றதாகவும் நடித்து காட்டியும், வீடு வீடாக, தெரு தெருவாக சென்று பிட் நோட்டீஸ் கொடுத்து, அப்பாவி மக்களை மதமாற்றம் செய்ய நினைக்கும் கிறித்தவ கூட்டங்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம் !! 

நீங்கள் இங்கே உங்கள் மூதாதையர்கள் கும்பிட்ட குல தெய்வங்களை பரிதவிப்பில் விட்டு விட்டு, இந்து தெய்வங்களை சாத்தான் என்று கொச்சை படுத்தி பேசி அலைகிறீர்கள். மத வெறி கொண்டு. உண்மை எதுவென்று அறிய நாதி அற்று கிடைப்பதால். 

உண்மை என்னவெனில், ஆதியில்.. உலகம் பூராவும் மாந்தர் சிவ வழிபாடு செய்து வந்தனர் என்பது. 

ஆதி காலத்தில் சிவ வழிபாடு மட்டுமே உலகம் பூராவிலும் பரவி கிடந்தது. பைபிள் பழைய ஏ‌ற்பாடு கி. மு. 1500 ம் ஆண்டு வாக்கில் எழுதபட்டது. வட அமெரிக்காவில் 10000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோவில் எனும்  இடம் உள்ளது என்றும், அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் லிங்கத்தை தனியாகவும், ஆவுடையார் சேர்த்தும் வழிபட்டு வந்தனர்  என்றும் உலக தமிழ் ஆராய்ச்சி கழகம் வெளியிட்டு உள்ள சட தலம் எனும் ஆராய்ச்சி நூலில் பதிவு செய்து உள்ளனர். 

அரேபியாவில் yupiratis, Tigris என்ற இரு நதிகளுக்கு இடை பட்ட பகுதி சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகரீகத்தில் சிறந்து விளங்கி இருந்தது. அப்பிரதேச மக்கள் அப்போது உள்ள செய்திகளை களிமண் ஏடுகளில் வடித்து, தீயில் சுட்டு  பாதுகாத்து வந்து உள்ளனர். அவற்றில் சிவன் தொடர்பு உடைய இடப் பெயர்கள் காணப்படுவதுடன், சிவன் மாதமும் குறிக்கப்பட்டு உள்ளது. 

Mosey என்பவர் yakovaa அருளிய 10 கட்டளைகளையும் சிவன் மாதத்தில் 6 ம் நாள் sinoy மலை மீது நின்று மக்களுக்கு எடுத்து கூறினார் என்று கிருத்துவ மறையின் பழய ஏற்பாடு தெரிவிக்கிறது என்றும், mosey ன் காலம் கி. மு. 1500 என்றும் சடத்தலம் தமிழ் ஆராய்ச்சி நூலில் பதிவு செய்து உள்ளனர். 

பைபிள் பழைய ஏ‌ற்பாட்டில் குறிப்பிட பட்டு இருக்கும் Sian என்றும் கடவுளை ப‌ற்‌றிய குறிப்புகளை நன்கு ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் syan எ‌ன்பது சிவன் என்பதுவே என்றும் அது பழைய ஏற்பாட்டில் சிறிது திரிந்து எழுதப் பட்டு உள்ளது என்றும் சட தலம் நூலில் பதிவு செய்து உள்ளனர். 

இயேசு இறக்கும் தருவாயில், என் தேவனே, என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று உரத்த குரலில் கதறினார் என்று பைபிள் கூறுகிறது. அப்படியானால் இயேசுவின் தேவன்தான், சியான் என்று பைபிளில் கூறப்பட்டுள்ள சிவன் ஆகும்.

இந்தியாவில் உள்ள மத அறிவில் முழுமை பெறாத இந்து மக்களை, பொய் பிரச்சாரம் மூலம் மதம் மாற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்கள். அதற்கு நேர் மாறாக ஐக்கிய அமெரிக்காவில் அவர்களாக முன் வந்து இந்து மதத்தை ஏற்று கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. அவர்கள் வேத மந்திரம் ஓதி, சுப நிகழ்ச்சிகளை தூங்குங்கும் நிலை உருவாகி உள்ளது. 

அங்கு இந்துக்களின் எண்ணிக்கை 2.23 மில்லியனை (2, 230,000) எட்டியது. இது கடந்த 2007-ஆம் ஆண்டு எண்ணிக்கையை விட 85.8% அதாவது 1 மில்லியன் அதிகரித்துள்ளது. 

கடந்த 2007-ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் சுமார் 1.2 மில்லியன் (1,200,000) இந்துக்கள் வாழ்ந்தனர். அண்மைய கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நடைபெற்றது. ஏழு ஆண்டுகாலத்தில் சுமார் 1 மில்லியன் இந்துக்கள் அதிகரித்துள்ளனர். இதற்கு காரணம் நிறைய அமெரிக்கர்கள் இந்து தர்மத்தின் மீது ஆர்வம் கொண்டு இந்து தர்மத்திற்கு திரும்புவதே என்று பல தரப்பினர் கருத்துகள் தெரிவித்தனர். இன்னும் வரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்துக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்கின்றனர்.

கடந்த காலங்களில் ”Religious Landscape Study” எனும் பியூ ரிசர்ச் செண்டர் நிறுவனத்தின் அமைப்புகள் நடத்திய ஆய்வு ஒன்றில், அமெரிக்காவில் வாழும் இந்துக்களை பற்றி சில அரிய தகவல்களைச் கிடைத்துள்ளன. அவ்வறிக்கையின்படி அமெரிக்காவில் வாழும் 36% இந்துக்களின் மாத வருமானம் சுமார் 100,000 டாலர்
- 77% இந்துக்கள் பேச்சலர்ஸ் டிக்ரி (Bachelor’s Degree) பட்ட்தாரிகள்
- 48% இந்துக்கள் போஸ்ட்-கிரேஜுவெட் டிக்ரி (Post-Graduate Degree) பட்டதாரிகள்
- இந்துக்களிடையே தான் மிகக் குறைவான விவாகரத்து சம்பவங்கள் (5% குறைவான)
- 91% இந்துக்கள் மதமாறி திருமணம் செய்வதில்லை
- சான் ஃப்ரான்ஸிக்கோவில் (San Francisco) 5% இந்துக்கள் வாழ்கின்றனர்.
- நியூ யார்க்கில் (New York) 3% இந்துக்கள் வாழ்கின்றனர்.
- அமெரிக்காவில் படிப்பில் அதிக அக்கறை காட்டுவது இந்துக்கள்
- குடும்ப உறவுகளில் அதிகப்படியான அக்கறை காட்டுவது இந்துக்கள்
- கணவன் – மனைவி பந்த்த்தை வாழ்க்கை முழுவதும் தொடர்கின்றனர்
- அமெரிக்காவில் வாழும் இந்துக்களின் பெரும்பாலானோர் 30-35 வயதுடையவர்கள்
- ஐக்கிய அமெரிக்காவில் 500க்கும் அதிகமாக இந்து கோவில்கள் அமைந்துள்ளன
- 24% அமெரிக்கர்கள் மறுபிறவிகளை, கர்மவினைகளை நம்புகிறார்கள்
- சுமார் 22 மில்லியன் அமெரிக்கர்கள் யோகா கலையில் ஈடுபடுகிறார்கள்
- அமெரிக்காவில் வாழும் ஆசியர்களின் 10% இந்துக்கள்

மேலும், அமெரிக்காவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 7.8% சரிந்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவில் 78.4%மாக இருந்த  கிறிஸ்துவர்கள் தற்போது 70.6% மாக குறைந்துள்ளனர். சுமார் 11 மில்லியன் (11,000,000) கிறிஸ்துவர்கள் மதம் விலகிவிட்டனர் என்று பியூ ரிசர்ச் செண்டர் தமது அறிக்கையில் தெரிவி்த்துள்ளது. 

அமெரிக்காவில் சுமார் 23% மக்கள் தங்களுக்கு எந்த மதங்களும் இல்லை, நாங்கள் கடவுளை நம்புகிறோம் என்று குறிப்பிடுகின்றனர். சுமார் 3.1% நாத்தீகர்கள் ஆவர். 1.9% யூதர்கள் ஆவர்.

அமெரிக்காவில், இந்து தர்மம் புதிய எழுச்சி பெற்றிருக்கிறது. நிறைய இளைஞர்கள் இந்துக்களின் பழக்க வழக்கங்களை விரும்பி பின்பற்றுகின்றனர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ராமாயண வாழ்க்கை முறை அவர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. எல்லா வழிபாட்டு தலங்களுக்கு சென்று, எல்லா மக்களுடனும் சகஜமாகப் பழகுகின்றனர். இந்து கோயில்களுக்கு மட்டும் அல்லாது, அமெரிக்காவில் சீக்கிய மற்றும் பௌத்த ஆலயங்களும் அமைந்துள்ளன. இந்து மதங்களான சீக்கியமும் பௌத்தமும் அமெரிக்கர்களை அதிகம் கவர்கிறது. 

யோகா கலை, தியான கலை போன்றவை இந்த நாகரீக காலத்தில் தங்களின் மனத்திற்கு வாழ்க்கைக்கும் நிறையவே சாந்தத்தையும் நிம்மதியையும் அளிக்கின்றன என்பது பெரும்பான்மை அமெரிக்கர்களின் கருத்தாகும். இதுவரை சுமார் 6% கத்தோலிக் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவத்தில் இருந்து இந்து தர்மத்திற்கு திரும்பி உள்ளனர்.

ராஜன் ஸெட், அமெரிக்காவின் ”யுனிவெர்ஸல் சொஸைட்டி ஓஃப் ஹிண்டூஸ்ம்” எனும் அமைப்பின் தலைவர் ஆவார். அவர் கருத்துபடி, ”அமெரிக்க இளைஞர்கள் உள்ளத்தேடலில் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். கடல் போன்ற ஞானங்களையும் எல்லையற்ற அறிவுகளையும் வழங்கும் இந்து தர்மத்தை தேடி வருகின்றனர். இந்து தர்மத்தில் படித்து ஆராய்வதற்கு எல்லையற்ற ஞானங்கள் கொட்டி கிடக்கின்றன. பல ரிஷிக்களும், முனிவர்களும், ஞானிகளும், சித்தர்களும் மேலும் எத்தனையோ அறிஞர்களும் அருளுடையர்களும் வழங்கிய அமுதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்து, ஏற்கனவே தாங்கள் கற்றுத் தேர்ந்த அறிவியல் ஞானத்தோடு ஒப்பிடும் அமெரிக்கர்கள் பின்னர் இந்து தர்மத்தின் மீது ஆர்வம் கொள்கின்றனர். இதன்மூலம் இந்து தர்மம் அமெரிக்காவில் வளர்ச்சியடைகின்றது. ”

கிருத்துவ மறை கணக்குப் படி உலகை தேவன் படைத்தது இன்றிலிருந்து சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று வலை தளங்களில் உலா வரும் செய்திகளையும், பூமி தட்டையானது என்ற பைபிள் கருத்துக்களையும் அறிவியலுடன் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விட்டனர். 

பிரார்த்தனைகளால், நோய்களையும், ஊனங்களையும் மாற்ற முடியாது என்ற அறிவு பூர்வமான உண்மை அவர்களுக்கு புலப்பட ஆரம்பித்து விட்டது. 

மேலும், அமெரிக்காவில் வாழ்பவர்கள் தங்கள் மதங்களை தேர்ந்தெடுக்க நிறைய சுதந்திரம் வழங்கபடுகிறது. கிறிஸ்துவ அமைப்புகளினாலும் சர்ச்களினாலும் நிறைய தடைகளும் தடங்கல்களும் இருந்தாலும் அதையெல்லாம் மீறி நிறைய பேர் இந்து தர்மத்திற்கு திரும்புகின்றனர். 

இந்தியாவில், கிறிஸ்துவர் இந்து மதத்திற்கு மாறினால் அவரை சர்ச்சில் இருந்து விலக்கி வைக்கும் பழக்கம் எழுதாத சட்டமாக கடை பிடிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலை மாறினால், உலகில் அதிகமானோர் இந்து தர்மநெறிகளை ஏற்க துவங்குவர்; மீண்டும் உலகத்தில் சத்திய யுக வாழ்க்கை ஆரம்பம் ஆகும்.