Saturday, July 7, 2018

Surya worship - ஆதித்ய ஹ்ருதயம்

ஆதித்ய ஹ்ருதயம்
மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ
ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம்கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம்
செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும்
ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதே சித்த
அற்புத ஸ்லோகம் இது.
இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த
ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததா லேயேராமபிரான் ராவணனை
எளிதாக வெல்ல முடிந்தது. எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியைபாராயணம் செய்தால் அத் தொல்லைகள் சூரியனைக் கண்ட
பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும்.ஆயுளை
வளர்க்கும்.ஆபத்துக் காலங்களிலும் எந்த கஷ்ட காலத்திலும்
எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும்இத்துதியை ஜபிக்க, மனம்
புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும்.

ராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த
அகத்தியர், அப்போது போரினால் களைத்து,கவலையுடன் காணப்பட்ட
ராமபி ரானை அணுகிப் பின் வருமாறு கூறினார்.
மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா… ராமா… போரில் எந்த
மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லாபகைவர்களையும் வெல்ல
முடியுமோஅந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை
உனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்.
எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும் மிகுந்த புண்ணியத்தை
அளிக்கக்கூடியதும் வெற்றியைத் தரக்கூடியதும்அளவற்ற உடல் வலிமையை
தரக்கூடியதும் உத்தமமான, மங்களகரமுமான ஆதித்ய ஹ்ருதயம் என்ற
ஸ்தோத்திரத்தை நீஅனுதினமும் ஜபிக்க வேண்டும். இந்த ஸ்தோத்திரம்,
சூரியனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தைஅளிப்பதாகும்.
எல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்திரங்களுக்கு
மேலான மந்திரம் இது. எல்லா பாவங்களையும்போக்கவல்லது. மனக்கவலை,
உடற்பிணிகளைத் தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி செய்யும். எல்லா
மந்திரங்களை விடவும்சிறந்ததான இந்த ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.
ஒளிமிகுந்த கிரணங்களை உடையவனும் நித்தம் உதிக்கின்றவனும்
தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்பட்டவனும்எல்லா
ஐஸ்வர்யங்களையும் கொண்டவனும் ஒளிமிகச் செய்பவனும்
ஈஸ்வரனுமாகிய சூரியனை நீ பூஜை செய்ய வேண்டும்.
எல்லா தேவதைகளும் இந்த சூரியனுக்குள் அடக்கம். பிரகாசமாக
உடற்பொலிவு கொண்டவர். தன் கிரணங்களாலேயேஉலகை ரட்சிப்பவர்.
தேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த உலகமனைத்தையும் தன்
கிரணங்களால் காப்பாற்றுபவர் இந்தசூரியனே.
இவரே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் முருகனாகவும்
பிரஜாபதியாகவும் மகேந்திரனாகவும்குபேரனாகவும் காலமாகவும்
யமனாகவும் சந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிறார்.
இந்த சூரியனே பித்ருக்களாகவும் அஷ்டவசுக்களாகவும் சாத்யர்கள் என்ற
தேவர்களாகவும் அச்விநி தேவர்களாகவும் ஸப்தமருந்துகளாகவும்
மனுவாக வும் வாயுவாகவும் அக்கினியாகவும் பிரஜைகளாகவும்,
பிராணனாகவும் பருவ காலங்களைஉருவாக்குபவராகவும்
ஒளி பரப்புபவராகவும் திகழ்கிறார்.
இந்த சூரியனே அதிதியின் புத்திரன். உலகை உண்டுபண்ணுகிறவர்.
கர்மாக்களைச் செய்யச் செய்பவர். ஆகாயத்தில்சஞ்சரிப்பவர். மழையால்
உலகையே வளமாக்குபவர். ஒளிமிகுந்த கிரணங்களைக் கொண்டவர்.
பொன்னிறமானவர். தங்கமயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர்.
பகலை சிருஷ்டித்தவர்.
பச்சை குதிரையை வாகனமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான
கிரணங்களை உடையவர். ஸப்த என்னும் பெயருள்ளகுதிரையை உடையவர்.
பிர காசத்துடன் விளங்குபவர். இருளை அழிப்பவர். சுகம் அளிப்பவர்.
உலகையே ஸம்ஹாரம்செய்பவர். உலகம் தோன்றுவதற்கு முன்னாலேயே
உருவானவர்.
தங்கமயமான பிரமாண்டத்துக்குரியவர் இந்த சூரியன். காம, க்ரோத,
லோப குணங்களைப் போக்குபவர். எரிச்சலைக்கொடுப்பவர்.
ஒளி மிகுந்தவர். எல்லோராலும் போற்றப்படுபவர். பகலில் அக்கினியைத்
தன் கர்ப்பத்தில் வைத்திருப்பவர்.அதிதியின் புத்திரன். ஆகாசம்
முழுவதும் வியாபித்தவர். பனியை விலக்குபவர்.
இவர் ஆகாயத்தை உருவாக்கியவர். இருளைப் போக்குகிறவர். ரிக், யஜுர்,
ஸாம வேதங்களுடையப் பொழிவானஉபநிஷத்துகளால்
கொண்டாடப்படுகி றவர். அதிகமான மழையைக் கொடுப்பவர்.
நல்ல நீர்நிலைகளை உருவாக்குபவர்.தட்சிணாயனத்தில் விந்திய மலை
வழியாக சஞ்சரிப்பவர்.
இவர் வெயிலைக் கொடுப்பவர். வட்டமான பிம்பம் உள்ளவர்.
நட்புருவானவர். பொன் நிறமுள்ளவர். நடுப்பகலில்அனைவருக்கும்
தாகத்தை உண்டு பண்ணுகிறவர். அனைத்து சாஸ்திரங்களையும்
உபதேசிப்பவர். உலகத்தை நடத்திச்செல்பவர். தேஜஸ் மிகுந்தவர்.
எல்லோரிடமும் அன்பு கொண்டவர். எல்லோருடைய உற்பத்திக்கும்
காரணமானவர்.
அஸ்வினி முதலான நட்சத்திரங்கள், நவகிரகங்கள், பிற ஒளிகள்
எல்லாவற்றிற்கும் அதிபர் சூரியன். உலகத்தைக்காப்பாற்றுகிறவர்.
அக்கினி முதலான ஒளிகளுக்கெல்லாம் மேலாக ஒளிர்பவர். பன்னிரண்டு
உருவங்களாக இருப்பவர்.இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானே
நமஸ்காரம்
கிழக்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். மேற்கு
திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம்.நட்சத்திரங்களுக்கும்
கிரகங்களுக்கும் அதிபதியே, பகலுக்குத் தலைவனே நமஸ்காரம்.
என்றும் ஜெயிப்பவரே, வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே,
பச்சை குதிரை வாகனரே நமஸ்காரம்.ஆயிரக்கணக்கான கிரணங்களைக்
கொண் டவரே, சூரிய பகவானே நமஸ்காரம்.
பாவிகளுக்கு பயங்கரமானவரே, சிறந்த வீரரே, விரைந்து செல்பவரே
நமஸ்காரம். தாமரைப் பூவை மலரச் செய்பவரே,உலகிலேயே முதலில்
உண்டா னவரே சூரிய பகவானே, நமஸ்காரம்.
பிரம்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே,
சூரியனே, ஒளிவடிவானவரே, எல்லா யாகங்களிலும்கொடுக்கப்படும்
ஹவிஸை ஏற்றுக்கொள்பவரே, உக்கிரமான சரீரம் கொண்டவரே, நமஸ்காரம்.
இருளை விலக்குபவரே, பனியை உருக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே,
அளவற்ற ஆற்றல் கொண்டவரே, செய்நன்றியைமறப்பவரை வீழ்த்துபவரே,
நட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே, நமஸ்காரம்.
உருக்கிய தங்கம் போல ஒளிர்பவரே, அக்கினி ஸ்வரூபமானவரே, உலகத்தை
உருவாக்கியவரே, அஞ்ஞானத்தைப்போக்குபவரே, பிரகாசம் மிகுந்த வரே,
உலகத்துக்கு சாட்சியானவரே, நமஸ்காரம்.
மகாபிரபுவான இந்த சூரியனே பிரளயத்தை உருவாக்குகிறார். மீண்டும்
உலகத்தை இவரே சிருஷ்டிக்கிறார். இவரேபாதுகாக்கிறார். இவரே
தவிக்கவும் வைக்கிறார். இவரே தன் கிரணங்களால் மழை
பொழிய வைக்கிறார்.
பிற அனைத்து பூதங்களும் உறங்கும்போது, அந்தர்யாமியாக இந்த சூரியன்
விழித்துக்கொண்டிருக்கிறார். இவரே யாகம்வளர்க்கும் அக்கினியாகவும்
அந்த அக்கினி யாகத்தின் பலனாகவும் திகழ்கிறார்.
வேதங்களாகவும் யாகங்களாகவும் யாகங்களின் பலனாகவும்
உலகத்திலுள்ள எல்லா செயல்களுக்கும் மூல காரணனாகஇந்த
சூரியனே விளங்குகிறார்.
ராகவா! எந்த ஆபத்து காலத்திலும் சரி, எந்த வகையான கஷ்டம்
நேர்ந்தாலும் சரி, காய்ச்சல் முதலான உடல் நோய்கள்எப்போது
ஏற்பட்டாலும் சரி, காடுகளினூடே பயணம் செய்யும்போது எந்த ஆபத்து
எதிர்ப்பட்டாலும் சரி, எப்போது பயம்தோன்றினாலும் சரி, அப்போது
மேற்கண்ட ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்தால் போதும், எந்தத்
துன்பமும் நெருங்கமுடியாது, ராகவா!
ஒருநிலைப்பட்ட மனதுடன், தேவர்களுக்கெல்லாம் தேவனான, உலகத்துக்கே
அதிபதியும் ஆன இந்த சூரியனைவழிபடுவாயாக. இந்த ஸ்தோத்திரத் தை
மூன்று முறை ஜபித்தாயானால், இந்த யுத்தத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.
மனிதருள் மாணிக்கமே, இந்தக் கணத்திலேயே நீ ராவணனை வென்று
வெற்றிவாகை சூடியவனாகிறாய், என்று சொல்லி,அகத்தியர் ராமனை
ஆசிர்வ தித்து விட்டுச் சென்றார்.
அகத்தியர் கூறியதைக் கேட்ட ராமன் அப்போதே தன் சோர்வு முற்றிலும்
நீங்கியவனானான். மிகுந்த சந்தோஷத்துடன், புதுஉற்சாகத்துடன்
மேற்க ண்ட ஸ்லோகங்களை ஜபிக்கத் தொடங்கினான்.
மூன்று முறை நீரெடுத்து ஆசமனம் செய்து, பரிசுத்தனாகி, சூரியனைப்
பார்த்து இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்து, புது பலமும்,புதுப்பிக்கப்பட்ட
தன் னம்பிக்கையுடனும் ராமன் தன் வில்லை எடுத்துக்கொண்டார்.
மகா வீரனான ராமன், வில்லேந்தியவராய் சூரியனை நோக்கி ஜபம் செய்து
பரமானந்தத்தை அடைந்தார். திடமானமனோபலத்துடன் ராவணனுக்கு
எதிரான போருக்குத் தயாரானார். அவனை வதைக்க வேண்டும் என்ற
எண்ணத்தைமனத்திண்மையாகக் கொண்டார்.
அப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான், உவகை பூத்து
உள்ளக் களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி, ‘ராவண வதத்தை துரிதமாய் முடி’ என்று உபதேசித்து ஆசிர்வதித்தார்


ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்
அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நதயா
ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோக

தியானம்

ஜயதி ஜயதி ஸுர்ய: ஸதத லோகைக தீப:
கிரணம் ருதிததாப ஸர்வது கஸ்ய ஹர்தா
அருண கிரண கம்ய்: சாதிராதித்ய மூர்த்தி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாயி

1. ததோயுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தாயஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தகாய ஸமுபஸ்திதம்

2. தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
உபகம்யா பரவீதராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:

3. ராமராம மஹாபாஹோ ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேவ் நித்தியம் அக்ஷயம் பரமம்சிவம்

5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம்

6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விஸ்வவந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

8. ஏஷாப்ரஹ்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி
மஹேந்த்ரோ தனத: காலோயம: ஸோமோ ஹ்யபாம்பதி:

9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயல்விநௌ மருதோமனு:
வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண ருதுகர்தாப்ரபாகர

10. ஆதித்ய: ஸவிதாசூர்ய: கக: பூஸா கபஸ்திமான்
ஸ்வர்ண ஸத்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:

11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன் மதன: ஸம்புத்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்

12. ஹ்ரண்யகர்ப்ப ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி
அக்னிகர்ப்போதிதே: புத்ர: சங்க சிஸிர நாசன:

13. வயோமநாதஸ் தமோபேதீ ருக்யஜுர் ஸாமபாரக:
கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ விந்த்ய வீதிப்லவங்கம:

14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வதாபன:
கவிர்விஸ்வோ மஹாதேஜா: ரக்தாஸ் ஸர்வபவோத்பவ

15. நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம் அதிபோ விசுவபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வித்வாத சாத்மன் நமோஸ்துதே

16. நவ பூர்வாய க்ரயே பஸ்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே திநாதிபதயே நம:

17. ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

19. ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய ஸுர்யாயாதித்ய வர்சஸே
பாஸ்வதே ஸர்வ புக்ஷõய ரௌத்ராய வுபுஷே நம:

20. தமோக்னாய ஹிமக்ணாய ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
கிருதக்ணக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

21. தப்தசாமீ கராபாயவஹ்னயே விஸ்வகர்மனே
நமஸ் தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

22. நாசயத்யேஷவை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வன்ஷத்யேஷ கபஸ்திபி

23. ஏஷஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸஷ்டித:
ஏஸ ஏவாக்னி ஹெத்ரம்ச பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்

24. வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ க்ரதூனாம் பலமேவச
யானி க்ருத்மானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:

25. ஏனமாப்தஸுக்ருச் ரேஷு காந்தாரேஷு பயஷுச
கீர்த்தயன் புருஷ கஸ்சித் நாவீவஸீததி ராகவ

26. பூஜயஸ்வைன மேகாத்ர: தேவதேனம் ஜகத்பதிம்
எதத் திரிகுணிதம் ஜபத்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

27. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாமச யதாகதம்

28. எதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத்ததா
தாராயாமாஸஸுப்ரீதோ ராகவ: ப்ரயதா த்மவான்

29. ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது: பரம் ஹர்ஸ மவப்தவான்
த்ரிராசம்யஸுசிர் பூத்வா தணுராதய வீர்யவான்

30. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதாவதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஹ்யமான:
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி
பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரச்மே திவாகர
ஆயுராரோக்ய மைச்வர்யம் புத்ராம்ஸச தேஹிமே
ஆதித்ய ஹ்ருதயம் ஸம்பூரணம்

ஸ்ரீ சூர்யாஷ்டகம்.
ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர.
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே.
ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கஸ்யபாத்மஜம்.
ஸ்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்.
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வரம்.
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச.
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
இதி ஸ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

No comments:

Post a Comment