Saturday, July 7, 2018

ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை

ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை :-

       நாம் நம்மிடம் இருக்கும் அருமையான எளிமையான இயற்கை மருந்து பொருட்களை புறம்தள்ளி விடுகின்றோம்.

       இந்த ஆவாரம் பூ மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து காலம் காலம்மாக நமக்கு பலனளிக்கும் தாவர வகைகளுள் ஒன்று ஆகும். சாதரண உதாரணமாக அணுக்கதிர் தாக்கம் மரபணுக்களை தாக்கி பரம்பரை பரம்பரையாக நோயை உண்டாக்குகிறது, 

          இந்த ஆவரம்பூ மரபணுக்களை தாக்கும் கதிரியக்கத்தை தாக்கும் பொருளாக இருக்கிறது, புற்று நோய் தாக்கும் செல்களை கட்டுப்படுத்தும் திறனும் மற்றும் வெப்பமண்டல பிரதேசத்தில் சூரிய கதிரின் ஊடாக வீட்டில் புகும் ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க சக்திகளை தடுத்து அவற்றை மீண்டும் வெளியே அனுப்பும் ஆற்றலும் கொண்டது, 

        இதன் மெல்லிய இலைகளின் மேல் சிலிக்கா படலமும் இந்த பூக்களின் நிறமியும் இந்த பணியை அற்புதமாக செய்ய இயற்கை நமக்கு தந்துள்ளது.

       இதை பார்த்து விட்டு சொல்பவர் பலர் கூறலாம் இது மிகைப்படுத்தப்பட்ட அல்லது ஓவர் டோஸ் கற்பனை என்று .

         ஆவாரம் பூ கேன்சரை குணப்படுத்துமா அதற்கு என்ன ஆதாரம் என்றால் உலகில் பல நாடுகளில் உள்ள புற்று நோய் கழகத்தின் லோகோவில் உள்ள பூ இந்த கேசியா அரிக்குலடா என்ற ஆவாரம் பூ தான்( Canadian Cancer Society Logo) இந்த நாட்டு புற்று நோய் கழக லோகோவில் ஆவாரம் பூ இதழ் மையத்தில் வெள்ளை நிறம் இப்பூவின் சக்தி ஒருங்கிணைந்த அடையாளம் ஆகும். 

           ஆனால் கனடாவில் காணப்படும் கேசியா அறிக்குலாட்டா வை விட நம்ம ஊர் ஆவாரம்பூ வீரியம் மிக்கது, 

          இனியாவது வாசலின் மேலே பாட்டி சொருகி வைத்த ஆவரம்பூ கொத்தை காய்ந்த சருகு என வீசாதீர்கள்.

        "ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ " என்று முது மொழி உண்டு  ஆவாரை பொதுவாகவே ஒரு காய கற்ப மூலிகை ஆகும். 

          இதன் சிறப்புக்களையும் உபயோகிக்கும் முறைகளையும் காண்போம்.

           ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை நிலங்களிலும்  தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள். 

            பழிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி,மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன் படுகிறது. இது ஒரு வருடப் பயிர் ஆகும். மண்ணில் இதன் வேர் எடுக்கபடாவிட்டால் ஆண்டுக்கணக்கில் உயிருடன் இருக்கும்.

        ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின்  துர் வாடையைப் போக்குவதுடன்  இது முகத்திற்கும்  சருமத்திற்கு நிறமூட்டும்.

இதன் மர பட்டையில் "டானின்கள்" உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. 

       இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன.

       ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.

        இதன்பூச்சூரணத்தையோ,பூவையோ குடிநீராக்கிப் (கஷாயம் செய்தோ)அல்லது பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

      ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி,இவைகளை  நல்லெண்ணையுடன் காய்ச்சி  (ஆவாரைத் தைலம்) தலை முழுகி வர மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

       20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

         ஆவாரம் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து, ஆவாரை பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது.

        சகல நோய் நிவாரணியான ஆவாரை பஞ்சகத்தை  தினம் ஒரு மேஜை கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு, வெந்நீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். நாவறட்சி, உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

      ஆவாரம்பூ என்பது தங்கச்சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது .

        சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின் விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் . 

        ஆனால் ஆவாரம்பூ என்பது  இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் . அதே சமயம்  ஆவாரம்பூ மிக எளிதாக , விலையில்லாமல்  அங்கங்கே பூத்துக் கிடக்கிறது .

         ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள் . அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது . அவரிடம் அந்த மாணவர்கள் கேட்டார்கள் உங்கள்  ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் . அதற்கு அவர் சொன்னார் ” ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது  இந்த  பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம் “என்றார் .

     “ஆவாரம்பூ  காலையில் ஒரு கைப்பிடி , மாலையில்  ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன் ” என்றார் . “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள  தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது ” என்றார் .அவ்வளவு  சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ .

         ஆவாரம் பூவுடன் ஊற வைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால், நமைச்சல், துர்நாற்றம் நீங்கும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள், ஆவாரம் பூ கசாயத்தை தவறாமல் குடித்து வந்தால், உடல் குளுமை அடையும். 

          ஆவாரம் பூவை ஊறவைத்து, குடிநீர்(கஷாயம்) தயாரித்து அருந்தினால் நாவறட்சி நீங்கும். கண் எரிச்சல் நீங்கும். உடல் சூட்டினால் கண் சிவந்து விடும்.இவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து, நீர் விட்டு அரைத்து குழப்பி, படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட்டால் சிவப்பு நிறம் மாறும்.

       ஆவாரம்பூக்களையும்,இதன்  கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். 

      ஆவாரம் பூக்களை சேகரித்து, பாசிப்
பருப்புடன் சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். காலை, மாலை, அரை தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.
         ஆவாரம் பூ மட்டுமே  அல்லாமல்  இந்த செடியின்  இலை,பூ,காய்,வேர்,பட்டை  இவ்வைந்தையும் ஆவரை பஞ்சகம் என்று ஆயுர்வேதத்தில்  சொல்லப்படும் படும் எனறு முன்னரே குறிப்பிட்டிருந்தேன். 
           இந்த " ஆவாரை பஞ்சகத்தை"காபி போல் வைத்து பருகி வர பற்பல நோய்களை
போக்கும் அற்புத ஆரோக்கிய பாணமாகும்.
                  
                                  Dr M C Ramamurthy 
                                        9150001551

No comments:

Post a Comment