Saturday, July 7, 2018

பழைய சாதம்

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு - அமெரிக்க ஆய்வில் தகவல்.
நம் முன்னவர்கள் எந்த ஒரு காரியத்தையும் காரணம் இன்றி வகுத்து வைக்கவில்லை.

எதையும் மேலை நாட்டவர் சொன்னால்தான் நம்புவது என்ற மன நிலைக்கு மாறிக் கொண்டு வருகிறார்கள் நம்மவர் சிலர்.

அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள் நம் நாட்டவர்.

அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்... அதன் நன்மைகளும்...

ஆனால் இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதை கேவலமாக நினைகிறார்கள். ஆம், தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் இரவில் கூட டிபன் தான் சமைக்கப்படுகிறது. அப்படி இருக்க, எப்படி பழைய சோற்றினை சாப்பிட முடியும். அதுமட்டுமின்றி, பலரது வீடுகளில் காலையில் பழைய சோற்றுக்கு மாற்றாக இட்லி, தோசை, பூரி, சப்பாதி, நூடுல்ஸ் போன்றவை வந்துவிட்டதால், பழைய சோற்றினை மறந்துவிட்டோம்.

காலை உணவை ஏன் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா...?

இங்கு அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வில் கண்டறிந்தவைகளையும், பழைய சோற்றினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வைட்டமின்கள் அதிகம்

பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

செரிமானம் மேம்படும்

பழைய சோற்றில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

முதுமை தடுக்கப்படும்

தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சோற்றினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.

எலும்புகள் வலிமையடையும்

முக்கியமாக பழைய சோற்றினை சாப்பிடுவதால், இக்காலத்தில் பலரும் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

உடல் சூடு தணியும்

நீங்கள் உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், பழைய சோறு சாப்பிடுங்கள். ஏனெனில் இதனை உட்கொண்டால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியுடன் இருக்குமாம்.

மலச்சிக்கல்

பழைய சோற்றில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சுறுசுறுப்பு

காலையில் பழைய சோற்றினை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாமாம். குறிப்பாக சோர்வு என்ற ஒன்றையே மறந்துவிடலாம்.

இரத்த அழுத்தம்

தற்போது பலருக்கும் உள்ள இரத்த அழுத்தத்தை பழைய சோறு கட்டுப்படுத்துமாம். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பழைய சோற்றினை காலை உணவாக எடுத்து வாருங்கள்.

அல்சர்

இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.

“பழைமை எல்லாம் தவறானது, புதியன எல்லாம் சரியானதே, புராணங்கள், இதிகாசங்கள், ஆன்மீக கோட்பாடுகள் இவையெல்லாம் வெறும் புரட்டு, அவை நமக்கு தேவை இல்லை என்று அவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக மறுப்பவர்களும் உள்ளனர். இவற்றை எல்லாம் நான் ஏற்றுக் கொள்வேன், ஆனால் இவற்றுக்கு அறிவியல் ஆய்வு கூடத்தில் இருந்து சான்றிதழை பெற்று வர வேண்டும் என்று கூறும் இரண்டும் கெட்டான்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மறந்து விட்ட ஒரு உண்மை என்னவெனில், பழைமை கோட்டுபாடுகள் யாவும், மிகமிக உன்னதமான நிலையில்  வாழ்ந்திருந்த நம்  முன்னவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் பல ஆயிரம் ஆண்டுகள் மனித வாழ்க்கையில் இவற்றை பின்பற்றி, ஒவ்வொரு கால கட்டத்திலும், தேவைக்கு ஏற்றவாறு கூட்டியும், குறைத்தும், வெட்டியும், ஒட்டியும் வளர்த்து, அவை நிலைபாடு அடைந்தபோது, அவற்றை சாத்திரங்களாக வடித்து வைத்தார்கள் என்பது.”...எமது அண்ணன் தஞ்சை திரு. கோவிந்தராசன் சுப்பிரமணியம் அவர்கள் எமது இன்னும் வெளிவராத புத்தகத்துக்கு தந்த அணிந்துரையின் ஒரு பகுதி.

குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் கோட்டு சூட்டு அணிகிறார்கள். அதைவிட குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் தோல் ஆடை அணிகிறார்கள். இந்திய மக்கள் நூலாடை அணிகிறார்கள். இவை யாவும் அந்தந்த பிரதேச வெப்ப நிலைக்கு ஏற்ற ஆடைகள் ஆகும்.

மேலை நாட்டு நாகரீக மோகம் கொண்டு வெப்ப பிரதேச நாடான நமது நாட்டிலும் கோட்டு சூட்டு அணிந்து, வியர்த்து விறுவிறுத்து, வியர்வை நாற்றத்தை மறைப்பதற்கு சென்று அடிக்கும் பழக்த்துக்கு மாறி வருகிறார்கள் பலர்.

சம்பா அரிசி/கைக்குத்தல் அரிசி

பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது. ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.

No comments:

Post a Comment